<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>யுகபாரதி</title>
	<atom:link href="http://yugabharathi.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://yugabharathi.wordpress.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 08 Jan 2013 02:13:43 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='yugabharathi.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>யுகபாரதி</title>
		<link>http://yugabharathi.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://yugabharathi.wordpress.com/osd.xml" title="யுகபாரதி" />
	<atom:link rel='hub' href='http://yugabharathi.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>ஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2012/03/30/%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%80%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2012/03/30/%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%80%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 30 Mar 2012 12:21:52 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=875</guid>
		<description><![CDATA[ஒரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு என்றார் பிரணாப் முகர்ஜி.அவர்,சரியான அவசரக் குடுக்கை.அவர் எந்த விஷயத்தையும் தெளிந்த புத்தியோடு பேசியதே இல்லை.முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.அது,ஒரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானமா இல்லை ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய படுகொலைக்கு எதிரான தீர்மானமா என்பது கூட தெரியாதவராக அவர் இருப்பதில் ஆச்சர்யம்ஒன்றுமில்லை. மிஸ்டர்.பிரணாப்,உங்களுடைய பாரம்பரிய நிலைப்பாட்டை எதன் நிமித்தம் விட்டுக்கொடுத்தீர்கள் என்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=875&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><strong>ஒ</strong>ரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு என்றார் பிரணாப் முகர்ஜி.அவர்,சரியான அவசரக் குடுக்கை.அவர் எந்த விஷயத்தையும் தெளிந்த புத்தியோடு பேசியதே இல்லை.முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.அது,ஒரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானமா இல்லை ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய படுகொலைக்கு எதிரான தீர்மானமா என்பது கூட தெரியாதவராக அவர் இருப்பதில் ஆச்சர்யம்ஒன்றுமில்லை.</p>
<p style="text-align:justify;">மிஸ்டர்.பிரணாப்,உங்களுடைய பாரம்பரிய நிலைப்பாட்டை எதன் நிமித்தம் விட்டுக்கொடுத்தீர்கள் என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது.இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டை மீறியதாக அவர் ஏன் இன்னும் பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றப்பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்.?</p>
<p style="text-align:justify;">அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க எடுத்த முடிவிற்கு பின்னால் தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தம்  இருக்கிறது.ஒருமித்த குரலில் அத்தனைக் கட்சிகளும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் இது சாத்தியப்பட்டிருக்கிறதே தவிர,இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எழுந்த மனித நேய கரிசனமென்று இதைச் சொல்வதற்கில்லை.அமெரிக்கா உலகத்தில் உள்ள அத்தனை நாடுகள் மீதும் இதே கரிசனத்தோடுதான் நடந்து கொள்கிறதா என்றால் அதுவும் இல்லை.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் இம்முறை தமிழர்களின் உணர்வுகளுக்கு லாபம் கிடைத்திருக்கிறது அவ்வளவே.</p>
<p style="text-align:justify;">இந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களித்தால் அது இந்தியாவிற்கு ஒருபோதும் நல்லதல்ல என்று சில ஆங்கில பத்திரிகைகள் தலையங்கம் தீட்டின.ஆங்கில ஊடகங்களில் பொறுப்பு வகிக்கும் மலையாள பத்திரிகையாளர்கள் தமிழர் பிரச்சனைகளில் காட்டும் மாற்றான்தாய் மனப்பான்மையே இதிலும் வெளிப்பட்டன.எனினும்,தமிழக அரசியல் கட்சிகள் விடாப்பிடியாகக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க நேர்ந்தது.இந்தியா வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும்.ஆனால்,இந்தியாவிற்கு அதுவே தீரா வரலாற்றுக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.இதுவே வெற்றி என்பதுபோல சிலர் கொண்டாடுகிறார்கள்.உண்மையில்,இதுவாவது வெற்றி பெற்றதே என்பதுதான் நிலை.</p>
<p style="text-align:justify;">இலங்கையில் நடத்தப்பட்ட குற்றப்போரும் போர்க்குற்றமும் முதல்முறையாக உலகத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.தமிழக அரசியல் கட்சிகளில் குறிப்பாக தி.மு.க. இந்த விஷயத்தில் காட்டிய அக்கறை,தங்களுடைய கடந்தகால நாடக ஒத்திகையை மெய்ப்பிக்கும் முயற்சி என்று மாற்றுக் கட்சிகாரர்கள் சொன்னாலும் தீர்மானத்திற்கு ஆளும் காங்கிரஸ் அரசை நிர்பந்தித்த வகையில் தி.மு.க.விற்கு கணிசமான பங்கு உண்டு என்றே சொல்ல வேண்டும்.</p>
<p style="text-align:justify;">முப்பது ஆண்டுகாலமாக நிகழ்ந்து வந்த தமிழர்களின் உரிமைப்போர் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின் முடிவுக்கு வந்ததாக சிங்கள பேரினவாத அரசு அறிவித்தது.விடுதலைப் புலிகளை வேரோடு வீழ்த்திவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் இலங்கை ராணுவம் உலக ஊடகத்திடம் பீற்றிக் கொண்டது.ஊடகவியலாளர்கள் யாரையுமே உள்ளே அணுமதிக்காமல் மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை இந்தியாவும் மௌனமாகவே பார்த்துக்கொண்டிருந்தது. மௌனம், கொடூரமானதென்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணராதவர்கள் அல்ல.இலங்கைக்கு அடிக்கடிப் போய், போரை நிறுத்த வலியுறுத்தியதாக ரீல்விட்ட சிவசங்கர மேனன் அன் கோக்கள் ஒவ்வொரு புகைப்படத்திலும் ராஜபக்சேவுடன் சிரித்தபடியே காட்சி தந்தார்கள்.ஒரு கொலைகாரனோடு நின்று சிரித்துக்கொண்டிருப்பவர்கள் கொலைகாரனைவிட கொடியவர்கள் என்பதை நாமறிவோம்.இன்று,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா கொடிபிடித்திருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுகிற வேலையை இந்தியா செய்திருக்கிறது.இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் கோபமுறுமோ என அஞ்சி மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.</p>
<p style="text-align:justify;">இத்தனை கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் பிரதமருக்கு இலங்கையை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது.ஏன் என்றால் அதில்தான் திருடனுக்கு தேள் கொட்டிய சமாச்சாரம் அடங்கியிருக்கிறது.இந்தியாவின் துணையில்லாமல் இந்தப்போரை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது என்றது இலங்கை ராணுவம்.அப்போது இந்தியாவைச் சேர்ந்த பிரணாப்போ ப.சிதம்பரமோ மன்மோகன் சிங்கோ நாங்கள் எங்கே துணைபுரிந்தோம் எனக் கேட்கவில்லை. இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுக்கவும் இல்லை.அன்றைக்கு காத்த அதே மௌனம் இன்றைக்குப் பிரச்சனையாக வாய்ப்பிருக்கிறது என்பதால் இலங்கையை எதிர்க்க அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வாக்களித்திருக்கிறது.வாக்களிக்க மறுத்திருத்தால் இந்தியாவின் நிலை இருக்கிற மோசத்தை விட இன்னும் மோசமாகிப் போயிருக்கும்.</p>
<p style="text-align:justify;">இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தை சித்திரிக்கும் ஒரு ஆங்கில தினசரி ஆசியாவில் இந்தியா தனி என்றது.அதாவது,ஆசிய நாடுகளில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு எதிராக வாக்களித்திருப்பதால் ஆசிய நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது என்பதுபோல அக்கட்டுரைச் சொல்கிறது.தனித்து நிற்பதற்கும் தனிமைப்பட்டு நிற்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட புரிந்து கொள்ளாத இந்திய பத்திரிகையுலக அசடுகளை என்னவென்பது?என்னைக் கேட்டால் ஆசியாவிலேயே இந்தியா மட்டும்தான் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்திருக்கிறது என்பேன்.இன்னும் கொஞ்ச நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா இலங்கைக்குப் போராயுதங்கள் தந்து உதவியதே தவிர போர்க்குற்றங்கள் செய்ய உதவவில்லை என்றும் சொல்லக் கூடும்.இந்தத் தீர்மானத்திற்கான ஆதரவை தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீவிரமாகக் கோரியதைப் பார்த்த இலங்கைத் தூதர்,  இவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று பேசி பிறகு மன்னிப்புக் கேட்டார். அதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.நாடாளுமன்ற விவகாரங்களைப் பற்றி கருத்து கூற ஒரு தூதருக்கு எந்த அருகதையும்  உரிமையும் இல்லை என்பது கூடவா தெரியாது.அதிபர் என்றால் ஆளைக் கொல்பவன் என்ற ராஜபக்சேவின் காட்டு தர்பாரில் நரிகளுக்கு தூதர் வேலை தரப்பட்டிருக்கிறது போல.</p>
<p style="text-align:justify;">ஈராக் உள்ளிட்ட அநேக நாடுகளில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட அந்தந்த நாடுகளில் அநீதிகளைக் கட்டவிழ்க்கும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் கியூபாவும் ஒன்று.அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையை ஆதரித்திருக்கிறது.இலங்கையை ஆதரிக்க அது சொன்ன காரணம்:பிற உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடும் உரிமை அமெரிக்காவிற்கு இல்லை.தங்களுடைய நாட்டு விடுதலைக்கே இன்னொரு நாட்டில் இருந்து வந்த சேகுவேரா என்னும் ஆஸ்மா நோயாளிதான் காரணம் என்பதை கியூபாவால் எப்படி மறக்க முடிந்தது?</p>
<p style="text-align:justify;">அமெரிக்கா, தங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்ததும் இலங்கை அரசு உடனே அமெரிக்க காலனி நாடுகளாக ஆசிய நாடுகளை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியது.தங்கள் குற்றத்தை மறைக்க பிறர் மீது குற்றப்பழி சுமத்துவது நேர்மையற்றவர்களின் தந்திரம்.இலங்கை அரசு தைரியமிருந்தால் தங்கள் மீது கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியதுதானே.அதைவிடுத்து அமெரிக்காவை விமர்சிப்பதும் காலனி நாடு பற்றி கதை விடுவதும் உலகத்திடம் தங்கள் குற்றங்களை குழிதோண்டி புதைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை.</p>
<p style="text-align:justify;">இந்திராதான் விடுதலைப்புலிகளை வளர்த்தார்.இலங்கையில் நடப்பது உள்நாட்டு பிரச்னையில்லை.இனப்படுகொலை என்றார்.இனத்துக்கு எதிராக தொடுக்கப்படும் போரை ஆதரிக்க முடியாது என்று நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.ஆனால்,அதே இந்திரா இருந்த காங்கிரஸ் இனப்படுகொலைக்கு ஆதரவான நிலையை இந்திராவின் மகன் ராஜீவ் கொலையால் எடுக்க நேர்ந்தது.தங்களுக்கு சாதகம் என்றால் ஆதரிப்பதும் பாதகம் என்றால் எதிர்ப்பதும் இந்தியாவுக்குப் புதிதில்லை.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவான திருத்தங்களை செய்வித்த பிறகே இந்தியா வாக்களித்திருக்கிறது.தீர்மான நகல் குறித்த விளக்கங்கள் வெளியாகும்போதுதான் இந்தியா தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததா இல்லை நிர்பந்தத்தின் காரணமாக வாக்களித்ததா எனத் தெரியவரும்.ஈழப் பிரச்சனையில் வடகத்திய பத்திரிகைகளின் கையாண்ட மௌனத்தைக் குறிப்பிட்ட ஆக வேண்டும்.அவர்களுக்கு இலங்கையில் நடந்தது நடப்பது பற்றி எப்போதுமே பெரிய அக்கறை இருந்ததில்லை.அமெரிக்க தீர்மானித்தை ஆதரிக்கக் கூடாது என்றுதான் கருத்து வெளியிட்டன.பாலஸ்தீனத்தில் பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சனைகளை ஆர்வமாக வெளியிடும் அவர்கள் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் வேதனை.</p>
<p style="text-align:justify;">இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த இந்திய அரசு ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலை வற்புறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜீன் மாதம் 8ம்தேதி தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.சிங்கள பேரினவாத அரசு தமிழர்களைச் சமமாக நடத்தவும் அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கவும் இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வர வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.தமிழக அரசு கொண்டுவந்த அத்தீர்மானத்தைப் பற்றி மத்திய அரசு இதுநாள்வரை  எந்தக்கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align:justify;">இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் மத்திய அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.மனித உரிமை மீறலை கண்டிக்கவும் இல்லை.தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய நிலையில் அப்போராட்டத்தை ஒடுக்கவே இந்தியா உதவி செய்தது.சீனாவும் இந்தியாவும் உதவிய காரணத்தால்தான் முப்பதாண்டு கால போராட்டத்தை ஒடுக்கினோம் என்று வெளிப்படையாக ராஜபக்சே அரசு சொல்லியது.சீனாவின் நோக்கம் எதுவாக இருப்பினும் இந்தியாவின் நோக்கம் தமிழர்களுக்கு எதிரானது என்றே பார்க்கத் தோன்றுகிறது.இலங்கைத் தமிழர்கள் அத்தனைபேரும் விடுதலை புலிகள் என்றுதான் இந்திய ஊடகங்கள் சித்திரிக்கின்றன.மனித அவலத்தை கண்டிக்கவும் மக்களுடைய உரிமைகளை பரிசீலிக்கவும் ஓர் அரசை நிர்பந்திக்காமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வாக்குமூலங்களை வெளியிட்ட வடகத்திய பத்திரிகைகள் இவ்விஷயத்தை எப்படிப் பார்க்கும் என போகப் போகத்தான் தெரியும்.</p>
<p style="text-align:justify;">இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள பற்றை முற்றாக விலக்கிக்கொள்ளும் தருணமிது.தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அப்பாவித் தமிழர்களின் துயர்துடைக்க மேலும் சில ஆக்கினைகளைச் செய்ய முன்வர வேண்டும்.மீள் குடியேற்றத்துக்கான வாய்ப்புகளை தமிழர்களுக்கு உருவாக்கவும் கொடுங்கோல் ஆட்சியாளன் ராஜபக்சேவை உலக நீதி மன்றத்தில் நிறுத்தி<br />
தண்டிக்கச் செய்யவும் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் இதுநாள்வரை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்த மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிப்பார்கள்.இல்லையென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மண்கவ்விய நிலையை தமிழகத்திலும் அடைய நேரும்.புரட்சி இளைஞராக தன்னை முன்நிறுத்தும் ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் தமிழகத்திலும் பாவத்துக்குரியதாக மாறும்.இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.மூன்று ஆண்டு காலமாக இடையறாமல் அவர்கள் தொடந்து வலியுறுத்தி வந்த முழக்கத்தை உலகம் கேட்க தொடங்கியிருக்கிறது.ராஜபக்சே அரசுக்கு எதிராகத் தமிழ்ச் சமூகம் நடத்திய போராட்டத்திற்கான பலனாகவே அமெரிக்கா தீர்மானம் அரங்கேறியிருக்கிறது.இது,போராட்டத்தின் வெற்றி அல்ல.போராட்டத்தின் வெற்றிக்கான முதல் படி.இந்தப் படிக்கட்டில் ஏறி அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி தமிழர்கள் நடைபோட வேண்டும்.</p>
<p style="text-align:justify;">பத்து வயது சிறுவன் மீது திரும்பத் திரும்ப ஐந்து குண்டுகளை செலுத்திய ஒரு கொடூர அரசை தண்டிக்க எந்த நிபந்தனையும் தேவையில்லை.அப்பாவித் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட சோகக்கதைகளை இனியும் வாசித்து வருத்தம் தெரிவிப்பதை விடுத்து வேறு எதையாவது செய்யவதற்கு உதவி புரிய வேண்டும்.அது,தமிழன் இன்னொரு தமிழனுக்கு செய்யும் உதவி அல்ல.மனித உரிமை மீறலுக்கு எதிரான போர்.உலக பயங்கரவாதத்தை எதிர்க்க அரசாங்கங்கள் ஒன்றிணையும் போது உலக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனும் இருக்கிறது.நாம் தமிழர் என்பதைக் கூட பிறகு யோசிக்கலாம்.முதலில் மனிதர் என்பதை உலகிற்கு அறிவிப்போம்.இலங்கையை ஆதரிக்கும் அரசுகளுடனான உறவை முறித்துக்கொள்ள இந்தியாவை நிர்பந்திப்போம்.அதுவே நாம் செய்ய தற்போது செய்யத் தக்கதும் செய்ய வேண்டியதும்.பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் சொற்களுக்கு உதாரணமாக இருக்கும் இலங்கை அரசை கூண்டோடு கூண்டிலேற்றுவோம்.கொக்கரித்த ராஜபக்சே போர் முடிவை அறிவிக்க வருகையில் மண்ணில் விழுந்து முத்தமிட்டு தன் தாய்நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.அதே மண் தன் மீசையில் ஒட்டியதற்காக வருத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.</p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=875&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2012/03/30/%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%80%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நானும் விகடனும்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2012/02/12/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2012/02/12/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 12 Feb 2012 01:56:52 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=863</guid>
		<description><![CDATA[கிறிஸ்தவ இறை வணக்கப் பாடலோடு துவங்கும் எங்கள் பள்ளியின் ப்ரேயர் மீட்டிங்கில் ஒருநாள் தலைமையாசிரியர் ஹாரீஸ்,நம்முடைய பள்ளி மாணவன் யுகபாரதியின் கவிதை ஆனந்தவிகடன் என்னும் தலை சிறந்த பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.அவரைப் போல மற்ற மாணவர்களும் கல்வி தவிர்த்த பிற துறைகளிலும் சாதனை படைத்து புகழ்பெற வேண்டும் என்றார்.ஒரு கவிதை பத்திரிகையில்  பிரசுரமாவதையே என் தலைமையாசிரியர் சாதனையாகக் கருதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆனந்தவிகடனாக இருந்தால் அதில் ஒரு கவிதை என்ன ஒரு துணுக்கு வெளியாவது கூட சாதனைதான்.எழுத்தாளர்.படுதலம் சுகுமாரனின் ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=863&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">கிறிஸ்தவ இறை வணக்கப் பாடலோடு துவங்கும் எங்கள் பள்ளியின் ப்ரேயர் மீட்டிங்கில் ஒருநாள் தலைமையாசிரியர் ஹாரீஸ்,நம்முடைய பள்ளி மாணவன் யுகபாரதியின் கவிதை ஆனந்தவிகடன் என்னும் தலை சிறந்த பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.அவரைப் போல மற்ற மாணவர்களும் கல்வி தவிர்த்த பிற துறைகளிலும் சாதனை படைத்து புகழ்பெற வேண்டும் என்றார்.ஒரு கவிதை பத்திரிகையில்  பிரசுரமாவதையே என் தலைமையாசிரியர் சாதனையாகக் கருதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆனந்தவிகடனாக இருந்தால் அதில் ஒரு கவிதை என்ன ஒரு துணுக்கு வெளியாவது கூட சாதனைதான்.எழுத்தாளர்.படுதலம் சுகுமாரனின் ஒரு துணுக்கு நாட்டையே அமளி துமளியாக்கிய நேரத்தில்தான் தலையாசிரியர் அவ்விதம் சொன்னதாக ஞாபகம்.உண்மையில்,அப்போது என் கவிதை ஆனந்தவிகடனில் பிரசுரமாகவில்லை.உள்ளூர் தனிச்சுற்று இதழ் ஒன்றில்தான் வெளியாகி இருந்தது.ஆனந்தம் என்பது அந்தப் பத்திரிகையின் பெயர்.ஆனந்தம் பத்திரிகையை ஆனந்தவிகடனாகச் சொல்லிவிட்டாரே என நினைத்தாலும் அவர் சொன்னவுடன் எழுந்த கரவொலி என்னை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.ப்ரேயர் மீட்டிங்கில் கைதட்டு வாங்கிய மிகச்சில மாணவர்களில் நீயும் ஒருவன் என்று இப்போதும் என் தலைமையாசிரியர் நெகிழ்வார்.</p>
<p style="text-align:justify;">தலைசிறந்த என்ற அவருடைய அடைமொழி மேடைக்கானதோ என்னைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்திலோ எழுந்த சொற்களில்லை.அவர் ஆனந்தவிகடனைத் தொடர்ந்து வாசிப்பவர்.அதில் என் பெயரும் கவிதையும் வர வேண்டும் என்பதே அவர் அவா.அன்று அவர் பொய்யாக எனக்கு வாங்கிக்கொடுத்தக் கைதட்டை உண்மையாக்குவதற்காக இன்றுவரை எத்தனையோ கவிதைகளை விகடனின் பிரசுரத்திற்குக் தந்திருக்கிறேன்.இன்றைக்கு என் தம்பி ராஜூமுருகன் வட்டியும் முதலுமாக அப்பாராட்டை மெய்யாக வாங்கிக் கொண்டிருக்கிறான்.</p>
<p style="text-align:justify;">இளையராஜாவும் விகடனும் இருந்துவிட்டால் பாரதிக்கு எதுவுமே தேவையில்லை என்று என் நண்பர்கள் சொல்வார்கள்.ஒருமுறை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து திரைப்படத்திற்குக் கிளம்பினோம்.நான்குபேர் கிளம்பிப்போக மூன்று டிக்கெட் மட்டுமே கிடைத்தது.உடனே,நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து அந்தவார ஆனந்தவிகடனை வாங்கி என்கையில் கொடுத்துவிட்டு இதை படித்துக்கொண்டிரு நண்பா என்று சொல்லிவிட்டு அபேஸ் ஆனார்கள்.அவர்கள் படம் முடிந்து திரும்பி வரும்வரை திரையரங்க வராந்தாவிலேயே முழு விகடனையும் வாசித்த அனுபவமுண்டு.படம் எப்படி என்று படம் பார்த்துத் திரும்பிய நண்பர்களைக் கேட்டேன்.ரொம்ப சுமார் என்றார்கள்.படம் ஏமாற்றும். விகடன் ஏமாற்றுவதில்லை என்று நான் சொன்னபோது அவர்கள் முகத்தில் கொள்ளும் எள்ளும் வெடித்தது.ஆனந்த விகடனை அட்டை டூ அட்டை படிக்காமல் ஒருவாரம் கூட கழிந்ததில்லை.தலையங்கம் தொடங்கி காட்டூன் வரை அதிலுள்ள அத்தனை விஷயங்களும் என்னைக் கவர்வன.</p>
<p style="text-align:justify;">நல்ல இலக்கியங்களை சிற்றிதழ்களே வளர்க்கின்றன என்னும் கருத்தோடு இயங்கி வந்த எத்தனையோ எழுத்தாளர்கள் எனக்கு விகடன் மூலமே அறியக் கிடைத்தார்கள்.என் வாசிப்புப் பழக்கம் தீவிரப்பட்ட காலத்தில் சுபமங்களா வந்துகொண்டிருந்தது.கோமல் சுவாமிநாதன் அதன் ஆசிரியராக இருந்தார்.அப்போது எழுத்தாளர் தஞ்சை.ப்ரகாஷின் பற்றி எரிந்த தென்னமரம் என்றொரு கதை அதில் வெளிவந்தது.அக்கதையை வாசித்த அத்தனை நண்பர்களும் இது விகடன்ல வந்திருக்கனும் ஆசானே என்றார்கள்.ப்ரகாஷை ஆசானே என்றுதான் நண்பர்கள் அழைப்பார்கள்.அவரும் ஆமாம்..ஆமாம்..கோமல் கேட்டாரேன்னு கொடுத்தேன்., இல்லாட்டி விகடனுக்குத்தான் அனுப்பியிருப்பேன் என்றார்.நான் வியந்த மதித்த அத்தனைபேரிடமும் விகடனைப்பற்றிய எண்ணம் உயர்வாக இருந்தது.இருக்கிறது.இருக்கும்.ஒரு பத்திரிகை எட்டிப் பிடிக்க வேண்டிய எல்லா உயரங்களையும் விகடன் வெகு சாதரணமாகச் செய்துவிடுகிறது.தர்மத்திற்கான துணையும் அதர்மத்திற்கான எதிர்ப்பும் விகடனின் கொள்கைகளாக இருக்கின்றன.ஈழப்போராட்டத்தில் இன்றுவரை பிறழ்வான செய்திகளை அது வெளியிடவில்லை என்ற ஒன்றைச் சான்றை அதன் மொத்தத் தகுதியாகக் கருதலாம்.சிலசமயங்களில் அதன் மொழிப் பிரயோகத்தில் எனக்கு மாற்று அபிப்ராயம் இருந்தபோதும் அதன் செல்நெறியில் சிராய்ப்பு ஏற்பட்டதில்லை.</p>
<p style="text-align:justify;">நுணுங்கி நுணுங்கி உலகத்தைப் பார்க்கும் வண்ணதாசனின் படிமங்களும் சுஜாதாவின் தெறிப்புகளும் எஸ்.ராவின் உவமைகளும் ஜெயமோகனின் நுட்பமும் நாஞ்சில்நாடனின் சங்க இலக்கியப் பகிர்வும் என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.ஒரு வாரத்து விகடன் என்பது ஒரு மாதம் பேசுவதற்கான கச்சாப்பொருளைக் கொண்டிருக்கிறது.மதனின் கேள்வி பதில்களுக்காகவே என் சைக்கோளாபிடியாவை வாங்கினேன்.மனுஷன் ஒருதடவையாவது சிக்குவார் என்று பார்த்தால் ஒவ்வொரு தடவையும் கூடுதல் தகவல்களோடு என்னை மண்கவ்வ வைத்துவிடுகிறார்.பத்திரிகை என்பது என்ன என்ற கேள்விக்கு தமிழில் நாம் காட்டக் கூடிய இதழாக விகடன் வாய்த்திருக்கிறது.இடது சிந்தனைகளின் இருப்பிடமாக தன்னை தகவமைத்துக்கொண்ட விகடன் இல்லாவிட்டால் மாவோயிஸ்டுகளின் மெய்முகம் நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.ஜனங்களுக்கு சொல்லப்படப் வேண்டிய உண்மைகளை அது ஒருபோதும் தவிர்த்ததில்லை.ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற தொடரை அது வெளியிடாது போயிருந்தால் தமிழருவி மணியனின் எழுத்து முகம் எனக்கும் தெரிந்திருக்காது.அவர் தொடரில் எழுதிய பெருந்தகைகளைப் பற்றி அறிமுகத்திற்குப் பின்னே மேலதிக தகவல்களைத் தேட ஆரம்பித்தேன் என்பது மிகையில்லை.</p>
<p style="text-align:justify;">விகடன் திரை விமர்சனத்திற்காக படம் எடுக்கும் பல இயக்குநர்களோடு எனக்கு நேரடி பரிச்சயமுண்டு.நேர்ப்பேச்சில் அவர்கள் விகடனின் மதிப்பெண் சூத்திரத்தை அறிந்துகொள்ளும் ஆவலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.சென்ற படத்தைவிட இந்த படத்திற்கு மூன்று மதிப்பெண் கூட்டியிருக்கிறார்கள் என்று ஒரு இயக்குநர் எனக்கு விருந்து கொடுத்தார்.விகடனில் மதிப்பெண் கூட்டியதற்கும் எனக்கு விருந்து தருவதற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை.பலமுறை என்னுடைய திரைப்பாடல்களைக் குறிப்பிட்டு விகடன் பாராட்டியிருக்கிறது.ஒரு குடுவை குளுகோஸை ஒன்றாகக் குடித்ததுமாதிரி.படைப்பாளிகள் தங்கள் தராசாக விகடனை வைத்திருக்கிறார்கள்.தங்களைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாகக் கருதுகிறார்கள்.தெருவாசகம் என்னும் தலைப்பில் விகடனில் நான் எழுதிய தொடர்க் கவிதைகளைப் பற்றி நேற்று கூட ஒருவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align:justify;">விகடனின் வடிவமைப்புக்கு நான் தீவிர ரசிகன்.ஒரு படைப்பை அல்லது செய்தியை விகடனைப்போல் அழகாக வடிவமைத்து வெளியிடும் பத்திரிகை தமிழில் வேறு இல்லை.அதன் வடிவமைப்பு, கத்திரித்து ஆல்பமாக வைத்துக்கொள்ளும் அளவுக்கான நேர்ந்தியுடையது.சமீப காலங்களில் திருமாவேலன் என் பிரத்யேக பிரியத்துக்குரியவராக மாறியிருக்கிறார்.முந்தைய ஆட்சியை இப்போதைய ஆட்சியை அவர் பார்க்கும்விதம் எளிய மனிதனின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது.அடடே, சரிதானே எனச் சொல்ல வைக்கும் தொனிதான் ஒரு நல்ல பத்திரிகையாளனின் வெற்றி.</p>
<p style="text-align:justify;">குறிப்பிட்டு சொல்லத்தக்க இன்னொரு அம்சம்.அய்யா நெடுமாறனின் நேர்காணல்கள்.எனக்குத் தெரிய அவருடைய நேர்காணலை அதிகமும் பிரசுரித்தது விகடனே.ஈழம் பற்றி எரியும் போதெல்லாம் ஒற்றைக் குரலாக அவர் வெளிப்படுத்தும் செய்திகளை சூடு குறையாமல் தந்துகொண்டிருக்கிறது.அதேபோல தமிழ்த்தேசியம் என்ற சொல்லாட்சியை வேறு எந்த வெகுஜன ஏடுகளும் நானறிய இதுவரை பயன்படுத்தியாகச் சொல்வதற்கில்லை.தமிழ் இன அடையாளம் என்பது பத்திரிகைத் துறையில் தீண்டத்தகாத விஷயமாக இருந்துவரும் சூழலில் சீமான்,தொல்.திருமாவளவன்,தியாகு,வேல்முருகன் போன்றோரின் பெயர்களும் செய்திகளும் தவறாமல் விகடனில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.</p>
<p style="text-align:justify;">தனிப்பட்ட முறையில் விகடன் என்னை அவ்வப்போது ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறது.கதை,கவிதை,நேர்காணல் என்று அவ்வப்போது திரைப்படப்பாடலைத் தாண்டி நான் இயங்குவதற்கான வெளியை உருவாக்கித்தருகிறது.என் முதல் சிறுகதை விகடனில்தான் வெளிவந்தது என்று நண்பர்.நா.முத்துக்குமார் போல நானும் சொல்லிக்கொள்ள இடம் அளித்திருக்கிறது.கபிலன்,தாமரை ஆகியோருடன் உரையாடுவதற்கும் அவர்கள் என்னோடு பகிர்ந்துகொள்வதற்கும் விகடனில் வெளிவரும் படைப்புகள் உதவுகின்றன.விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைப் பற்றி நாகூர் ரூமி சொல்லிக்கொண்டிருந்தார்.1968ல் வெளிவந்த தூயவனின் கதைப்பற்றி அப்பேச்சு நீண்டது.அக்கதை விகடனின் முத்திரைக் கதையாக வெளிவந்த தகவலையும் அவரே குறிப்பிட்டார்.</p>
<p style="text-align:justify;">மனித தர்மங்கள் என்பது அக்கதையின் தலைப்பு.வாழ்வின் சகல சரடுகளையும் இழுத்து நம்முன் கேள்வியாக நிறுத்தும் அக்கதையைப் படித்ததில் இருந்து தூயவனின் எழுத்துக்கள் மீது காதல் மீதூறிவிட்டது.திரைத்துறையைச் சேர்ந்தவராக மட்டுமே நான் அறிந்த தூயவன் அற்புதமான கதைசொல்லியாகவும் இருந்திருக்கிறார்.அவருடைய எழுத்துக்களைத் தொடர்ச்சியாக விகடன் வெளியிட்டிருக்கிறது என்னும் தகவல் கூடுதல் ஆர்வத்தைக் கொடுத்தது.மனித தர்மங்கள் கதையில் தூயவன் இறுதியாகச் சொல்லும் வரிகள் இவை.நான் திரும்பி நடந்தேன். நானோர் அசடன். ஆமாம். மனித உலகத்தின் தர்மங்களைப் புரிந்துகொள்ள முடியாத மடையன். சாகிறவனைப் பற்றி எழுதிப் பிழைப்பது எழுத்தாள தர்மம். சாகிறவனைப் பற்றிப் பேசிப் பிழைப்பது பேச்சாள தர்மம். சாகிறவனைக் காட்டிப் பிழைப்பது, ஓவிய தர்மம். இவற்றையெல்லாம் கலை, இலக்கியம் என்கிற புனிதத் தன்மைக்கு உயர்த்திவைத்து ரசித்துக் கொண்டிருப்பது என் போன்ற ரசிகர்கள் தர்மம். மொத்தத்தில் இவையெல்லாமே மனித தர்மங்கள்தானே? தூயவனின் இந்தக் கேள்விக்குப் அப்பால் கலை இலக்கியத் தேடலை என்வென்பது?</p>
<p style="text-align:justify;">சென்றவாரம் என்னுடைய பத்தாவது தமிழாசிரியர் தொலைபேசினார்.தற்போது அரசுப் பள்ளியில் பணியாற்றும் அவருடைய மாணவன் ஒருவன் சொல்வனத்திற்குக் கவிதை அனுப்பியிருப்பதாகவும் அதுபற்றி விசாரிக்க முடியுமா எனவும் கேட்டார்.இல்லயே அய்யா&#8230;விகடனில் தேர்வாகும் வரை அதுபற்றி விசாரிக்க முடியாதே என்றேன்.இல்ல பாரதி,நல்ல எழுதாறன் அதான் உற்சாகப்படுத்தலாமேன்னு என்றார்.விரைவில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும் ஒரு அரசுப் பள்ளியில் என்னைப்போலவே ஒரு பையன் கைதட்டு வாங்கப்போகிறான்.அத்தனைக் கைத்தட்டலையும் மெய்யாக்க திரையரங்க வாசலிலோ தெருவோர பூங்காவிலோ விகடனோடு பொழுதுகளை கழிக்கப் போகிறான்.விகடன் ரிலே பந்தம் போல. ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாறிக்கொண்டே இருக்கும்.கையில் வைத்திருப்பவன் வெளிச்சத்தோடு ஓடுவான்.வெளிச்சம் வேண்டுபவன் கைகளை நீட்டுவான்.</p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=863&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2012/02/12/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மெய்யான பொருள் கொள்க</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/12/12/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/12/12/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 12 Dec 2011 10:16:31 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=852</guid>
		<description><![CDATA[இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜபாட்டை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.விழா முடிந்த ஓரிரு தினங்களுக்கு உள்ளாகவே சமூக வலைதளங்களின் மூலம் அப்பாடல்கள் சிலாகிக்கப்பட்டன.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு ஆறுதலாக இருக்கும் தமிழ்த் திரையிசை பாடலுக்கு இத்தனை வரவேற்புக் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.அப்பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடலாகப் பனியே பனிப்பூவே பாடலைச் சொல்லலாம்.அதில்,முள்வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம்போல் ஆனேனே,அன்பே உன் அன்பில் நானும் தனி நாடாகிக் போவேனே என்றொரு கண்ணி வருகிறது.அதுகுறித்து பலரும் நெகிழ்வோடு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். கிடைக்கும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=852&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><strong>இ</strong>ரண்டு தினங்களுக்கு முன்பு ராஜபாட்டை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.விழா முடிந்த ஓரிரு தினங்களுக்கு உள்ளாகவே சமூக வலைதளங்களின் மூலம் அப்பாடல்கள் சிலாகிக்கப்பட்டன.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு ஆறுதலாக இருக்கும் தமிழ்த் திரையிசை பாடலுக்கு இத்தனை வரவேற்புக் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.அப்பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடலாகப் <strong>பனியே பனிப்பூவே</strong> பாடலைச் சொல்லலாம்.அதில்,<span style="text-decoration:underline;"><strong>முள்வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம்போல் ஆனேனே,அன்பே உன் அன்பில் நானும் தனி நாடாகிக் போவேனே</strong></span> என்றொரு கண்ணி வருகிறது.அதுகுறித்து பலரும் நெகிழ்வோடு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.</p>
<p style="text-align:justify;">கிடைக்கும் சின்னச்சிறு சந்தர்ப்பத்திலும் எங்களை ஊடகங்களின் வாயிலாக நினைக்கிறீர்களே பதிவு செய்கிறீர்களே என்ற அவர்களின் நெகிழ்வு ஒருபுறம் இருந்தாலும் அவர்களை வேறாக நாம் நான் என்றுமே பார்ப்பதற்கில்லை.தனி நாடு கோரிக்கையை முன்வைத்த நிகழ்ந்த போரில் நமக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டு நம்முடைய சொந்தங்கள் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் அவலத்தை பதிவு செய்யும் பொருட்டே அவ்வரிகளை பதிவு செய்கிறேன்.அதை ஒரு காதல் பாடலில் எழுத அனுமதித்த இயக்குநர் சுசீந்தரனுக்கும் இசையமைப்பாளர்.யுவனுக்கும் என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.எனினும்,இவ்வரிகளை ஒருசிலர் தவறாகப் பொருள்கொண்டு காதல் பாடல் இப்படியெல்லாம் எங்களை குத்திக்காட்டுவதா என யுவனிடம் குறைப்பட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.வெல்வது உறுதி என்று பொங்குதமிழ் நிகழ்வுக்காகப் பாடல் எழுதி என் உணர்வை வெளிப்படுத்தினாலும் இம்மாதிரி வெகுஜன ரசனைக்கேற்ப சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை பதிவு செய்வதே சிறப்பு எனக் கருதுகிறேன்.இதைத் தவறுதலாகவோ தப்பான அர்த்தத்திலோ பொருள் கொண்டு என் உண்மையான உணர்வுக்கு களங்கம் கற்பிக்கத் தோழர்கள் முயல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தில் காதல் வந்ததே பாடலில் கவிஞர்.வைரமுத்து இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்து காதல் வந்ததே என்று எழுதியதைப் போலத்தான் இதுவும்.தனி நாடு என்னும் இலக்குக்காக முள்வேலியும் முடிவில்லா போரையும் தொடர வேண்டிய இச்சூழலில் பாடலின் அர்த்தத்தில் பிழை ஏற்படுத்தி தமிழ் உணர்வுகளின் இதயத்தை காயப்படுத்த வேண்டாமே.இப்பாடலை உச்சிமோர்ந்து வரவேற்கும் தோழர்களிடம் இப்பாடலுக்கான மெய்யான பொருளை கேட்டுத் தெளிவு பெறுங்கள்.கருத்துக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறப்படும் கருத்துக்கள் களங்கமுடையன என்பதை யாவரும் அறிவோம். </p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=852&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/12/12/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஹீரோன்னா எங்க அப்பாதான்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/11/07/%e0%ae%b9%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/11/07/%e0%ae%b9%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 07 Nov 2011 02:22:13 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=840</guid>
		<description><![CDATA[அம்மாவே நம்முடைய சகல பெருமைக்கும் வெற்றிக்கும் காரணம் என்று கருதப்பழகி அதையே முதன்மைப்படுத்திவிட்டதால் அப்பாக்களின் இதயங்களை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம்.ஆனால்,ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் அப்பாவின் அருமை புரிந்துவிடுகிறது.எனக்கு என் அப்பாவின் அருமை மிகச் சின்னவயதிலேயே புரிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அப்பாவை எல்லோரும் தோழர் என்றே அழைப்பார்கள்.த.கா.பரமசிவம் என்னும் பெயருடைய அவரை ஏன் அப்பாவின் நண்பர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் விளங்கவே இல்லை.சிவம் என்று அழைக்கலாம் அல்லது வேறு ஏதாவது பட்டப்பெயர் இட்டு அழைக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=840&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><a href="http://yugabharathi.files.wordpress.com/2011/11/yugabharathi-father-photo-1.jpg"><img class="alignright size-medium wp-image-842" title="yugabharathi father photo 1" src="http://yugabharathi.files.wordpress.com/2011/11/yugabharathi-father-photo-1.jpg?w=200&#038;h=300" alt="" width="200" height="300" /></a><strong>அ</strong>ம்மாவே நம்முடைய சகல பெருமைக்கும் வெற்றிக்கும் காரணம் என்று கருதப்பழகி அதையே முதன்மைப்படுத்திவிட்டதால் அப்பாக்களின் இதயங்களை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம்.ஆனால்,ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் அப்பாவின் அருமை புரிந்துவிடுகிறது.எனக்கு என் அப்பாவின் அருமை மிகச் சின்னவயதிலேயே புரிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அப்பாவை எல்லோரும் தோழர் என்றே அழைப்பார்கள்.த.கா.பரமசிவம் என்னும் பெயருடைய அவரை ஏன் அப்பாவின் நண்பர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் விளங்கவே இல்லை.சிவம் என்று அழைக்கலாம் அல்லது வேறு ஏதாவது பட்டப்பெயர் இட்டு அழைக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் தோழர் என்கிறார்கள்.அப்பாவும் அவருடைய நண்பர்களை அவ்வாறே அழைப்பார்.ஒருசிலரை காம்ரேட் என்பார்.காம்ரேட் என்றாலும் ரஷ்யமொழியில் தோழர் என்றுதான் அர்த்தம் என்பதை என்னுடைய பத்தாவது வயதில் தெரிந்துகொண்டேன்.</p>
<p style="text-align:justify;">ஒரு அளவுக்கு யூகித்திருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சகாக்களை தோழர் என்றோ காம்ரேட் என்றோதான் அழைப்பார்கள்.எனவே,மிகச் சின்ன வயதிலேயே என் அப்பா சராசரி அப்பாக்களை விட எனக்கு ஹீரோவாகத் தெரிந்தார்.அப்பாவை சந்திக்க எப்போதும் வீட்டிற்கு யாராவது வந்து கொண்டே இருப்பார்கள்.வருபவர்களை உபசரிப்பதிலும் நலம் விசாரிப்பதிலுமே அம்மாவின் பொழுதுகள் கழியும்.அம்மாவின் பெயர் வசந்தகுமாரி.இருவருமே அந்தக் காலத்து பத்து வகுப்பு படித்தவர்கள்.சரளமாக பேசவும் எழுதவும் உலக விஷ்யங்களை உற்றுணரவும் கற்றவர்கள்.ஆரம்பத்தில் அப்பா, பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்தவர்.ஆலையில் எழுந்த சம்பளப் பிரச்சனைக்காக பொதுவுடைமைச் சங்கம் ஏற்பட அச்சங்கத்தில் இணைந்த அப்பா பின்னாட்களில் தீவிர கட்சி ஊழியராக மாறிப்போனார்.கட்சி செயல்பாட்டில் ஏற்பட்ட தீவிரம் அப்பாவால் வேலையில் நீட்டிக்க முடியவில்லை.யார் ஆலோசனையும் கேட்காமல் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழுநேர கட்சி உறுப்பினராகிவிட்டார்.ஒரு எளிய மனிதன் தன்னை சமூக மனிதனாக மாற்றிக்கொள்ள துணிந்த தருணமாக அதைச் சொல்லலாம்.</p>
<p style="text-align:justify;">எனக்கு விவரம் தெரியத் தொடங்கிய காலத்தில் அப்பாவுக்கு உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம் இருந்தது.வீட்டைப்பற்றியோ வீட்டில் உள்ள நெருக்கடிகளைப் பற்றியோ அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.அக்கா,நான்,தம்பி மூவரும் அப்பாவின் செயல்பாடுகளில் அதிருப்தியுறத் துவங்கினோம்.நம்மை கவனிக்காமல் ஊர் வேலையே முக்கியம் என்று கருதுகிறாரே என்பதாக.எத்தனையோ பேருடைய பிரச்சனைகளைப் பற்றி ஆழமாக விவாதித்து தீர்வு சொல்லக் கூடிய ஒருவர், எங்களுடையப் பிரச்சனைகளை புரிந்துகொள்ளவில்லையே என பேசிக்கொள்வோம்.ஆனால்,அதை எல்லாம் வெளியாட்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.அப்பாவுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவதோ கழுத்து நிரம்ப நகைகளை அணிந்துகொள்வதோ பிடிக்காது.நம்முடைய வசதி பிறரை கவலைக்கு ஆட்படுத்திவிடக் கூடாது என்பார்.சலவை செய்த ஆடைகளை மட்டுமே அணிவார்.வெள்ளுடையில் அவரை பார்க்க பிரமிப்பாக இருக்கம்.எப்படி சட்டை கலையாமல் வெளியே போய்விட்டுத் திரும்புகிறார் என்பதும் அந்த வயது ஆச்சர்யங்களில் ஒன்று.தஞ்சாவூர்க்காரர்களுக்கு உரிய தவிர்க்க முடியாத பழக்கமான வெற்றிலை போடுதல் அப்பாவின் விசேஷத் தகுதிகளில் ஒன்று.சீவல் பொட்டலத்தில் இருந்து ஒரு விழுது கூட கீழே இறையாமல் கடவாயில் சீவலை இடுக்கும் லாவகம் மற்றுமொரு பிரமிப்பு.</p>
<p style="text-align:justify;">பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு புத்தகங்களை நான் வாசிக்க அப்பாவே முதல் காரணம்.அப்போது சோவியத் யூனியன் புத்தங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.கார்க்கியும் டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் குறைந்த விலையில் கிடைத்ததால்தான் தமிழ்நாட்டிலும் பிரபலமானார்கள்.அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அப்பாவின் தோழர்கள் அதாவது வீட்டுக்கு வரும் காம்ரேட்டுகளிடம் நான் பேசிப்பேசியே இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டேன்.அப்பா மாதிரியே தலைசீவப் பழகி பிறகு அப்பா மாதிரியே மீசையை அக்காவின் ஐபுரோ பென்சிலில் கிறுக்கிக்கொண்டதுவரை எத்தனையோ எண்ணிலடங்கா சம்பவங்கள்.அப்பா மீது ஒருபுறம் அதிருப்தி இருந்தாலும் எல்லோரும் அப்பாவை மதிக்கிறார்களே அது ஏன் என்று எண்ணத் தொடங்கியபோதுதான் அப்பா சினிமா ஹீரோ அல்ல ரியல் ஹீரோ என்று புரியத் தொடங்கியது.தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சிந்திப்பவர் நல்ல அப்பா என்றால் என் அப்பா சகல பிள்ளைகளுக்கும் சிந்திப்பவர் மிக மிக நல்ல அப்பாதானே?</p>
<p style="text-align:justify;">தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அதற்காக கடும் வார்த்தைகளில் அவர் ஏசியதில்லை.ஆனால்,அவருடைய பார்வை ஏசலைவிட எச்சரிக்கை நிரம்பியதாய் இருக்கும்.கல்வியின் அவசியத்தைப் பற்றியும் அதற்காக எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்வதற்கும் அவரால் முடிந்த அளவு உதவி செய்தார்.எதையும் எங்களிடம் திணிக்காததே அவருடைய இயல்பு.அந்த இயல்பே நாங்கள் பட்டம் வாங்கவும் பள்ளி கல்லூரிகளில் சிறந்த மாணவராக விளங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிற்று.முழுநேர கட்சி உறுப்பினராக இருந்த அப்பாவுக்கு கட்சி மாத ஊதியம் தர முன்வந்தபோது மக்களுக்கு சேவை செய்வதற்கு ஊதியம் பெறமாட்டேன் என வலுகட்டாயமாக மறுத்துவிட்டார்.கிராமத்தில் செங்கல் சூளை இருந்தபடியால் ஓரளவு குடும்பத்தைச் சமாளிக்க முடிந்தது.கொஞ்சம் காலம் மரவியாபாரம் செய்தார்.மரத்தை வாங்கி வெட்டி திருப்பூருக்கும் ஈரோட்டும் ஏற்றுமதி செய்தார்.மரத்தை வெட்டுவதால் மழை இல்லாமல் போய்விடும் என்ற தெளிவு ஏற்பட பிறகு அதையும் செய்யவில்லை.பஞ்சாயத்து யூனியன் சார்பாக காலனி வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் பங்கெடுத்து எங்களிடம் செங்கல் சூளை இருந்ததால் சில வீடுகளைக் கட்டித்தரும் பணியை மேற்கொண்டார்.அதிலும் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் திட்டத்திற்கு அதிகமாக செலவு செய்யச்சொல்லி தாங்கள் தருவதாகச் சொன்ன தொகையைத் தராமல் போகவே செங்கல் காசும் மிஞ்சாமல் போனது.நான் சிரித்தே கொண்டே அம்மாவிடம் அப்போது சொல்வேன்.அப்பா எல்லோருக்கும் கல்லடிக்கிறார்.ஆனால்,அவர்களோ அப்பாவுக்கு மண்ணடித்து விடுகிறார்கள்.மண்ணடித்து என்றால் இல்லாமல் செய்வது என்பது எங்களூர் வழக்கு.அவர் முயன்று பார்த்து எல்லாவிற்றிலும் தோல்வியுற்றார் என்று சொல்ல முடியாது.முயற்சிகளில் இருந்து பாடம் கற்றார்.அவர் முயல்வதும் பின் தோற்பதும் சாகசங்கள் நிரம்பிய விளையாட்டு போல இருக்கும்.அவர் மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்றால் ஏதோ ஒன்றில் அவர் நஷ்டமாகியிருக்கிறார் என அர்த்தம்.இதுயெல்லாம் சரிவரவில்லை என்று அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு லாரி வாங்கினார்.அதையாவது சரியாக கவனித்தாரா என்றால் அதுதான் இல்லை.அந்த லாரி தெரிந்தவர்களுக்கு சும்மாவும் கட்சி மாநாடுகளுக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனமாகவுமே பயன்பட்டு சேட்டுக்குக் கட்டவேண்டியத் தொகைக்கு பலியாகிப்போனது.பிறகு லாரி வேண்டாம் முகவாண்மைத் தொடங்கலாம் என முனைந்தார்.முகவாண்மை மூலம் செங்கல் மணல் ஆகியவற்றை வாங்கி விற்கும் தரகுத் தொழில்.முகவாண்மை என்றால் எண்டர்பிரைசஸ் என்று அர்த்தம்.அது ஏதோ சான்றாண்மை என நினைத்து கட்டட பொறியாளர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.முகவாண்மை கட்சியின் கிளை அலுவலம் மாதிரி செயல்பட்டு பின்னால் வாடகைக்கு கொடுத்தவரின் நிர்பந்தத்தால் காலி செய்யப்பட்டது.அவரால் எதையும் சரிவர கவனிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவருடைய கட்சி ஈடுபாடுதான்.அதை நாங்கள் புரிந்துகொள்வதற்கு நாள் பிடித்தது.அவரைக் கடிந்துகொண்டு எதும் ஆகப்போவதில்லை.அவரால் நாட்டுக்கு நல்லது கிடைக்குமே ஒழிய வீட்டுக்கு அல்ல என விட்டுவிட்டோம்.</p>
<p style="text-align:justify;">ஒருவர் எவ்வளவு முயன்றாலும் அவர் கொண்டிருக்கும் கொள்கையில் இருந்து விடுபட இயலுவதில்லை.கெட்ட கொள்கையோடு இருப்பவர்க்கே சுயநலன் உண்டு.அப்பா,மக்கள் நலனில் அக்கறையுடையவர் அவரால் சுயநலனைப் பெற முடியவில்லை.ஒருநாள் என்பது நம்மைப் பொறுத்தவரை நமக்கானது.ஆனால்,என் அப்பா மாதிரியானவர்களுக்கோ முழுக்க முழுக்க பிறருக்கானது.நம்முடைய அப்பாவைப் பற்றியோ அம்மாவைப் பற்றியோ சொல்லும்போது அவர்கள் நமக்குள் பெருமிதம் ஏற்படுத்த வேண்டும்.பெருமிதம் ஏற்படுத்துபவர்களே நல்ல பெற்றோர்கள்.நம்முடைய வளர்ச்சிக்காக உழைப்பவர்கள்.நம்மைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் இருப்பவர்கள்.மகனுக்கு மகளுக்குப் பிடிக்கும் என்று கஷ்டப்பட்டு வாங்கித் தருபவர்கள் இவர்களே சாலச் சிறந்தவர்கள்.அப்படிப்பார்த்தால் என் அப்பா இதை எல்லாவற்றையும் விட மேலானவர்.அவருடைய மகன் என்று இன்றைக்கும் நான் சொல்லிக்கொள்வதில் உள்ளூர பெருமிதம் இருக்கிறது.அவருடைய மகனா நீங்கள் என்று ஊரில் புருவம் உயர்த்துகிறார்கள்.சொத்துக்கு பதிலாக முகமறியாத பல நல்ல இதயங்களை சம்பாதித்து இருக்கிறார்.அவருக்கு ஒரு சிறு காயம் என்றாலும் பதறிக் கொண்டு வரும் நூற்றுக்கணக்கான தோழர்கள் இருக்கிறார்கள்.அவரிடம் தங்கள் குடும்பச் சிக்கலைச் சொல்லி தீர்த்துவைக்கக் கோருகிறார்கள்.அவர்போல் ஆகாது என்று எங்களிடம் சொல்பவர்கள் அவரை பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்.வேறு கட்சிக்குப் போயிருந்தால் சம்பாதித்து செட்டிலாகி இருக்கலாம் என்கிறார்கள்.வாழ்க்கை எனில் செட்டிலாவது என்று நினைப்பவர்களும் அப்பா சொன்னால் கேட்பவர்களாய் இருக்கிறார்கள்.ஒருமுறை அப்பா ஒரு கட்சித்தோழருக்காக காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப் போனார்.தோழருக்காக பரிந்துபேசும் போது காவல் துறை அதிகாரி ஒருவர் அப்பாவின் தோள்மீது கைவைத்து வெளியே போகச் சொல்லி விட்டார்.அவ்வளவுதான்.</p>
<p style="text-align:justify;">அந்தக் காவல்துறை அதிகாரிக்கு எதிராக பகுதி மக்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள்.அவர்மீது கையை வைப்பதா என்று.அப்பா எவ்வளவோ மறுத்தும் பகுதி மக்கள் கண்டன கூட்டம்போட்டு சம்பந்த அதிகாரியை வேறு ஊருக்கு மாற்றும்படி போராடி வெற்றியும் கண்டார்கள்.அதிகாரியின் பெயரை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கிறேன்.அந்த கண்டன ஊர்வலத்தில்தான் அப்பாமீது எனக்கு தனி மதிப்பு ஏற்பட்டது.பூ விற்பவர்கள்,கைவண்டி இழுப்பவர்கள் இதர அடிமட்ட வேலை செய்யும் தொழிலாளர்கள் அத்தனைபேரும் அப்பாமீது காட்டிய அன்பும் பாசமும் இன்றைக்கு நினைத்தாலும் மலைக்க வைக்கிறது.எங்களுக்குஅப்பா மீதிருந்த அதிருப்தி எங்களிடமிருந்து முற்றாக விடுபட்டதும் அச்சம்பவத்தில் இருந்துதான்.</p>
<p style="text-align:justify;">அப்பாவோடு வெளி ஊருக்கோ வெளி நாட்டுக்கோ குடும்பத்தோடு சென்றதே இல்லை.என் பதிமூன்று வயதுவரை வருடாவருடம் பொங்கலுக்கு மட்டும் மூன்றுநாள் அப்பா பிறந்து வளர்ந்த ஊரான பெரும்புலியூருக்குப் போயிருக்கிறோம்.திருவையாறில் இருந்து ஆறுகிலோ மீட்டர் தொலைவில் அச்சிறிய கிராமம் இருக்கிறது.நாங்கள் வசித்துவந்தது,வருவது தஞ்சை நகரத்தில் என்றாலும்  கிராமத்து நம்பிக்கைகளை பண்டிகைகளை நாங்கள் அறிந்துகொள்ள ஆசைப்படுவார்.தஞ்சை பூக்காரத் தெருவில் குடியிருந்தபோது ஒருசில ஆங்கில படத்திற்கு அப்பா என்னைக் கூட்டிப் போயிருக்கிறார்.ஒருமுறை உமர்முக்தர் என்னும் படத்தை வாடகைக்கு வீடியோ எடுத்து எங்களைக் காணசெய்தார்.அதோடு சேர்த்து டென்காமாண்மெண்ட்ஸும் பார்த்தோம்.முதல் மரியாதை வெளிவந்த சமயத்தில் அந்தப்படத்தை வெகுவாகப் புகழ்ந்தார்.பாரதிராஜாவைப் அப்பா தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அசல் கலைஞர் என்பார்.தண்ணீர் தண்ணீர் என்றொரு நாடகம்.கோமல்சுவாமிநாதன் அவர்கள் எழுதி கே.பாலசந்தர் அவர்களால் படமாக்கப்பட்ட அத்திரைப்படம் முதலில் நாடகமாக ஊர்தோறும் நடிக்கப்பட்டது.அந்த நாடகம் தஞ்சை பெத்தனன் கலையரங்கில் நடந்தது.அதற்காக அப்பா பலபேரிடம் நன்கொடை பெற்றுக்கொடுத்தார்.சமூக அக்கறைமிக்க படைப்புகளுக்கு அப்பா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயங்குவதில்லை.அந்த நாடகத்தைப் பார்க்கச்செய்து அதைப்பற்றி எங்களோடு விவாதித்து இருக்கிறார்.</p>
<p style="text-align:justify;">அம்மாவோடு கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஒரு தருணத்தில் கடவுள் என்பது என்ன என்று அஸ்வகோஷ் எழுதிய நூலைக் கொடுத்து படிக்கச்சொன்னார்.அஸ்வகோஷ் என்பவர்தான் இராசேந்திரசோழன் என்னும் பெயரில் மிக அற்புதமான சிறுகதைகளை எழுதியவர் என்பதும் அப்பா சொல்லிய எனக்குத் தெரியவந்தது.கவிஞர்.தணிகைச்செல்வன் கவிதைகளை அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.அவருடைய மேதின கவிதையை உரக்கச் சொல்லிக்காட்டுவார்.நான் கவிதைகளோடு உறவு பூணுயதற்கும் அதுவே காரணமாக அமைந்தது.இன்குலாப்பின் மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்னும் பாடலுக்கு அப்பா அடிமை என்றே சொல்லலாம்.ஊரில் நடக்கும் கட்சிக் கூட்டங்களுக்கு என்னை அழைத்துச் செல்வார்.அக்கூட்டங்களில் பேசப்படும் விஷயங்களை குறித்து என்ன சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்கலாம்.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மதுரை மாநாட்டுக்கு என்னையும் அழைத்துப்போனார்.அங்கேதான் கவிஞர்.தணிகைச் செல்வன் எனக்குப் பாரதியார் கவிதை நூலை பரிசாக வழங்கினார்.பழ.நெடுமாறனிடமும் இன்னபிற தமிழ் ஆர்வலர்களிடமும் எனக்கு ஒட்டுதல் ஏற்படவும் அப்பாவே காரணாமாயிருந்திருக்கிறார்.ஒவ்வொரு சம்பவத்திலும் அப்பா எனக்கு வெவ்வேறு விதமான புரிதல்களை ஏற்படுத்தினார்.சராசரி அப்பாக்களைப் போல் ரொம்மாண்டிக் அப்பாவாக அல்லாமல் ரெவல்யூஷனரி அப்பாவாகத் தெரிந்தார்.என் வெற்றியில் அப்பாவுக்கு உள்ள பெருமிதத்தைவிட அவர் வாழ்க்கை மீதும் அவர் நடவடிக்கைகள் மீதும் எனக்கு கூடுதலான பெருமிதம் உண்டு.</p>
<p style="text-align:justify;">இழந்த நிலங்களை மீட்கவும் அடகு வைத்த நகைகளைத் திரும்பவும் புதிதாக வீடு கட்டவும் காரில் போகவும் ஜந்து நட்சத்திர ஹோட்டல் சந்திப்புகளுக்கு என்னை தயாரித்துக்கொள்ளவும் இன்றைக்கு என்னால் முடிந்திருக்கிறது எனில் அது அவரிடமிருந்து பெற்ற தைரியம் என்றே சொல்வேன்.உலகத்தில் பலநாடுகளுக்கு போய்விட்டுத் திரும்பும்போது அங்கே நடக்கும் அரசியல் பொருளாதார நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவதில் எனக்குள்ள ஈடுபாடு அப்பால் விளைந்ததே.எனக்கு கிடைத்திருக்கும் சொற்ப விளம்பரமும் புகழும் கூட அப்பாவுக்குக் கிடைத்திருக்க வேண்டியதே.அப்பாக்கள் தேராகத் தெருவில் இழுபட்டால் ஒழிய மகன்கள் ஊர் சுற்றிவர இயலாது.ஒழுக்கத்தையும் உயரிய பண்புகளையும் வாழ்வதற்கான தேவையான மனதிடத்தையும் தந்த அல்லது கற்பித்த ஒருவர் அப்பாவாகக் கிடைத்தது யான் பெற்ற பேறுகளில் ஒன்று.சொன்னால் சொல்லிக்கொண்டே இருக்கும் அளவுக்கு சம்பவங்கள் இருக்கின்றன.பட்டுக்கொண்டிருந்த கஷ்டத்தில் இருந்து என்னால் விடுபட முடிந்திருக்கிறது.செல்வத்தை ஈட்ட முடிந்த அளவுக்கு அப்பாபோல் நல்ல இதயங்களையும் சம்பாதிக்கவே ஆசை.சுய பொறுப்புணர்வு கொண்டர்கள் சமூக பொறுப்பில்லாதவர்களாக இருக்கக்கூடும் என்று நான் உணர அப்பாவே காரணம்.அதேபோல சமூக பொறுப்புணர்வு உள்ளவர்கள் சுய பொறுப்போடு நடந்துகொள்ள முடிவதில்லை.அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை, அவர்களைத்தவிர என்னும் நிலையில் இருக்கிறார்கள்.அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறப்பவர்கள் ஆரம்பத்தில் கஷ்டத்தை அனுபவித்தாலும் உலகத்தை புரிந்தவர்களாக இருக்க முடிகிறது.உலகமே புரிந்த பிறகும் ஏன் அப்பா இப்படி என்று புரிய முடியாமலும்போய்விடுவது உண்டு.எங்களூர் எம்.எல்.ஏ.வுக்கும் எம்.பி.க்கும் அப்பாவை நன்றாகத் தெரியும் தெருவில் பார்த்தால் நின்று பேசிவிட்டு நலம் விசாரித்துவிட்டுப்போவார்கள்.கொஞ்சதூரம் கடந்து  போனதும் அண்ணன் அப்படியே இருக்கிறார் என்பார்களாம்.அவர்களுடைய காரோட்டிகளுக்கு நெருக்கமானவர்கள்  என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.அப்பா மாதிரியானவர்கள் அப்படியே இருப்பதால்தான் அவர்கள் மந்திரிகளாகவும் துணைமந்திரிகளாகவும் இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.</p>
<p style="text-align:justify;">காதல் திருமணத்திற்கு அப்பா ஆதரவு தெரிவிப்பவர் என்றாலும் என் திருமணம் அப்பா அம்மா பார்வையில்தான் நடந்தது.தோழர் நல்லகண்ணு அவர்களின் தலைமையில் நடந்த அத்திருமணத்தில் அப்பாவின் தோழர்கள் உள்ளன்போடு செய்த பணிகளை என் வாழ்நாள் இருக்குமட்டும் மறப்பதற்கில்லை.கூட்டம் அரங்கு வழிந்தது.நல்ல மழை நாள் வேறு,அத்தனை கூட்டத்திலும் இறுதிவரை அப்பாவுக்கு உதவியது அப்பா சம்பாதித்த அன்பு.இதுதான் வாழ்க்கையில் அப்பாவை நான் முழு ஹீரோவாக எண்ணிய படலம்.நமக்கு எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் நம்முடைய நல்வினை கணக்கிடப்படும்.அவ்விதத்தில் அப்பா நல்வினை நாயகராகவே தெரிகிறார்.பதவி,பணம்.புகழ் ,அந்தஸ்து இவற்றை எல்லாம்விட ஆத்மார்த்தம் முக்கியம்.அது,அப்பாவால் எனக்குக் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை.</p>
<p style="text-align:justify;">இன்றைக்கு பொதுவாழ்க்கை என்பது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.சக மனிதனிடம் அல்ல தன் வீட்டிலும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.லட்சத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படுபவர்கள் வாழத் தெரியாதவர்களாகவும் கேவலமானவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள்.என்னுடைய அப்பாவுக்கும் அது பொருந்தும்.ஊருக்கெல்லாம் தோழராய் இருந்த ஒருவரை நானும் தோழராய்ப் பார்க்க தவறியதை இப்போது நினைக்கையில் வருத்தமாயிருக்கிறது.உங்களுக்கு ஊறு செய்பவர்களை நீங்கள் மன்னிப்பது போலவே என்னையும் மன்னியுங்கள் அப்பா.வீட்டில் என் அப்பா போல் நடந்துகொள்ளாமலும் வெளியில் என் அப்பாபோல் மட்டுமே நடந்துகொள்வதுமே என் முன்னே நிற்கும் சவால்கள்.அதை முடிந்தவரை வெல்வேன் என நம்புகிறேன்.அப்படி வென்றால் அது யாவும் என் அப்பா எனக்கு எடுத்த மானசீகம் பாடம் என்பேன்.ஒரு அப்பாவாக அவர் எனக்களித்த இம் மாபெரிய பாடத்தை நாளை என் மகள் காவ்யாவுக்குச் சொல்லித் தருவேன்.</p>
<p style="text-align:justify;">(<em>பாக்யா வார இதழுக்காக எழுதியது</em>)</p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=840&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/11/07/%e0%ae%b9%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>

		<media:content url="http://yugabharathi.files.wordpress.com/2011/11/yugabharathi-father-photo-1.jpg?w=200" medium="image">
			<media:title type="html">yugabharathi father photo 1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இசையும் இறைவனும்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/11/07/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/11/07/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 07 Nov 2011 02:03:06 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=836</guid>
		<description><![CDATA[குணங்குடி என்கிற ஊர்ப்பெயரை நான் தெரிந்துகொண்டது ஒரு சர்பத்தின் மூலம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கலாம்.ஆனால்,அதுதான் உண்மை என்னும் பட்சத்தில் வேறு எப்படி உங்களிடம் அவ்வூரைப்பற்றி பகிர்ந்து கொள்வது.தஞ்சாவூரில் குணங்கடி சர்பத் என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.நான் சொல்வது எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் குணங்குடி சர்பத் கொடிகட்டி பறந்த காலம்.கடையில் நிற்பதற்குக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்.அந்த வழியாகப் போகிறவர்கள் எல்லோரும் அந்தக் கடையில் ஒரு சர்பத்தாவது குடித்துவிட்டே மறுவேலைக்குக் கிளம்புவார்கள்.ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக இரண்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=836&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><strong>கு</strong>ணங்குடி என்கிற ஊர்ப்பெயரை நான் தெரிந்துகொண்டது ஒரு சர்பத்தின் மூலம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கலாம்.ஆனால்,அதுதான் உண்மை என்னும் பட்சத்தில் வேறு எப்படி உங்களிடம் அவ்வூரைப்பற்றி பகிர்ந்து கொள்வது.தஞ்சாவூரில் குணங்கடி சர்பத் என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.நான் சொல்வது எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் குணங்குடி சர்பத் கொடிகட்டி பறந்த காலம்.கடையில் நிற்பதற்குக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்.அந்த வழியாகப் போகிறவர்கள் எல்லோரும் அந்தக் கடையில் ஒரு சர்பத்தாவது குடித்துவிட்டே மறுவேலைக்குக் கிளம்புவார்கள்.ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக இரண்டு சர்பத்தைக் குடிக்காமல் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் தஞ்சை.ப்ரகாஷ் அவ்விடத்தை விட்டு நகரமாட்டார்.</p>
<p style="text-align:justify;">எழுத்தாளர்.தஞ்சை ப்ரகாஷ் ருசிகளில் தனித்த ருசி கண்டவர்.ஒரு பதார்த்தம் அது செய்யப்படும் இடத்தில் இருந்து அது தொடங்கிய காலம் வரை சகலவிதமான தகவல்களையும் எங்கிருந்துதான் படிப்பார் என்றே தெரியாத அளவுக்கு விஷயங்களை கொட்டுவார்.அவர்தான் எனக்கு குணங்குடியைப் பற்றிச் சொன்னார்.குணங்குடி என்ற ஊருக்கு உள்ள பெருமையும் மஸ்தான் சாகிபு அவர்களால் வந்தது என்றும் அவர்  சித்தர் மரபைச் சார்ந்தவர் என்றும் அவர் சொல்லச்சொல்ல அத்தகவல்களைக் கேட்க ஒரு சர்பத்திற்குப் பின்னால் இவ்வளவு செய்திகளா என மலைத்துப்போனேன்.சமீபத்தில் என் நண்பர் பாலமுருகன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.அஞ்சலைப் பிரித்துப்பார்த்தால் நான் வெகுகாலமாக தேடியும் கிடைக்காமல் இருந்த மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களை மயிலை வேணு என்னும் பாடகர் கானா பாடல் வடிவத்தில் பாடியளித்திருக்கும் ஒலிச்சுட்டி.கேட்கத் தொடங்கிய நான் தினசரி ஒரு அரைமணி நேரமாவது அவ்வொலிச்சுட்டியை இசைக்கிறேன்,வெகு அற்புதம்.ராமநாதபுரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நயினார் முகம்மது &#8211; பாத்திமா தம்பதியாரின் புதல்வரான மஸ்தான் சாகிபின் இயற்பெயர்.சுல்தான் அப்துல் காதர்.</p>
<p style="text-align:justify;">சூஃபியிசை மரபுகளில் இருந்து மஸ்தான் சாகிபின் பாடல்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என தஞ்சை.ப்ரகாஷ் எனக்குச் சொன்னபோது அது ஏதோ அறிவுக்கு எட்டாத வேற்று கிரகத்து விஷயம் எனக்கருதியிருந்தேன்.ஆனால்.அப்பாடல்கள் நம்முடைய சென்னை நகர கானாப் பாடகர்ளால் பாடப்பெறுவது புதுசெய்தி. இப்பாடல்களை ஒலிவடிவமாக்க பெருமுயற்சி மேற்கொண்ட என்.எஸ்.எஃப்.சி.க்கும் அதன் பொறுப்பாளராக இருக்கும் எழுத்தாளர்.எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும் என் வாழ்நாள் வணக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.எதிர்க்கலாச்சார கலை வெளிப்பாடாக கானா பாடல்களை அனுக வேண்டும் என்பதும் அப்பாடல்களில் மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களும் கலந்திருப்பதை முத்துக்குமாரசாமி ராமகிருஷ்ணனின் உதவியோடு ஆராய்ந்திருக்கிறார்.மயிலை வேணு சென்னை நகர நடைபாதைவாசிகளில் ஒருவர்.அவர் அப்பாடல்களை எங்கிருந்து கற்றார் என்பதும் அப்பாடல்களின் தொனியை உள்வாங்கி வாழ்ந்தவரா என்றும் கேட்பதற்கு வேணு தற்போது இல்லை.நடைபாதைவாசியாக இருந்த அவர் நடைபாதையிலேயே மரணமுற்றதாகத் தகவல்.</p>
<p style="text-align:justify;">குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களை குணங்குடியார் பாடற்கோவை என்னும் தலைப்பில் சிலபல வருடங்களுக்கு முன் கவிஞர்.அப்துல்ரகுமான் தொகுத்தளித்திருக்கிறார்.அந்நூலின் முன்னுரையைச் சிலாகித்து எழுத்தாளர்.நாஞ்சில் நாடனும் எப்போதோ எழுதியதாக நினைவு.சென்னை நகர மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பாடலாக கானா இருந்தபோதும் அது ஏன் மேலான இசை வடிவமாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது யோசனைக்குரியது.சினிமாவில் இசையமைப்பாளர் தேவா தொடர்ந்து தன்னுடைய படங்களில் அப்பாடல்களை பயன்படுத்திய போதிலும் அப்பாடல்களை ஆய்வு மாணவர்களைத் தவிர வேறு யாரும் கூடுதல் சிரத்தையோடு கவனித்ததாகத் தெரியவில்லை.கானா பாடல்களை ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றிருக்கும் பாடலாசியர்.நண்பர் கபிலனும் அதையே திரைப்பாடல் மொழியாக மாற்றும் முயற்சியில் செயல்பட்டு வருவதை நானறிவேன்.ஆல்தோட்ட பூபதி என்னும் பதிவுக் கூட அவரால்தான் கவனம் பெற்றது.</p>
<p style="text-align:justify;">மரணமுற்றவர்களின் வீட்டில் சைக்கிள் டயர்களைக் கொளுத்தி அவ்வெளிச்சத்தில் பாடப் பெறும் பாடல்களாக ஆரம்பத்தில் கானா பாடல்கள் இருந்திருக்கின்றன.சென்னை பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வசிப்போரின் வாழ்விடமாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில் இங்கேயே பலதலைமுறைகளாக வாழ்ந்துவருவோரின் கலை இலக்கியங்களுக்கு நேர்ந்த கதிதான் கானா நேர்ந்தது.அது ஏதோ குப்பத்து மக்களின் குத்துப்பாட்டு என்பதாக முகஞ்சுழிப்பவர்கள் மயிலை வேணு பாடியிருக்கும் மஸ்தான் சாகிபு பாடல்களை கேட்க வேண்டும்.வறியவர்களின் உடல்மொழியும் உதட்டு மொழியும் கவனம் பெறுவது அவ்வளவு எளிதல்ல.திரைப்படங்களில் வடிவேல் மதுரைக்காரர்களின் உடல்மொழியை வெகு நேர்த்தியாகக் கையாண்டு பாராட்டு பெற்ற அளவுக்கு சென்னையைச் சார்ந்த ஒருவர் சென்னை மக்களின் உடல் மற்றும் மொழியைப் பிரயோகித்து வெற்றி சாதிக்கும் வாய்ப்பு இல்லை.காரணம்,மதுரை என்பதற்குப் பின்னால் சாதியும் கலாச்சார பின்னணியும் அடங்கி இருக்கிறது.பாரதிராஜாவின் வருகைப் பின் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்கள் வெறும் காட்சிமாற்றங்கள் மட்டுமில்லை.சாதியக் குறியீடுகள் நிரம்பிய அதிர்ச்சி மாற்றங்கள்.இந்த கோணத்தில் பாரதிராஜாவின் படங்களைப் பார்ப்போமேயானால் சமூக அரசியலின் உள்ளீடுகளை உய்த்துணரலாம்.</p>
<p style="text-align:justify;">குணங்குடியாரைச் சொல்ல வந்துவிட்டு சினிமாப் பக்கம் போவதுபோல் தோன்றுகிறது.சினிமாப் பாடல்களையும் சினிமாவையும் சொல்லாமல் கலை இலக்கிய வெளிப்பாடுகளை அனுக முடியாததுதான் தற்போதைய நிலை.மஸ்த் என்றை இறைக்காதல் போதை என அர்த்தம்.உயரிய குணங்களில் குடிகொண்டிருக்கும் இறைவனை குணங்குடியார் என்றும் அவர்மீது இறைக்காதல் போதை கொண்ட தான் மஸ்த்தான் என்றும் சுல்தான் அப்துல் காதர் தன்னை அழைக்கச் செய்திருக்கிறார்.பதினேழாவது வயதில் தன்னை சூஃபியாக உணர்ந்து இசைப்பயணத்தை மேற்கொண்ட குணங்குடியார் நாற்பத்தி ஏழாவது வயது ஏக இறைவனை எட்டியிருக்கிறார்.அவருடைய பெயருக்கான காரணமாக இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.அதாவது,குணங்குடி என்பது தொண்டிக்குப் பக்கத்தில் இருப்பதால் முதலில் அவர் தொண்டியார் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.பிறகு வழக்கத்தில் தண்டியார் ஆகிவிட்டிருக்கிறது.தொண்டியில் இருந்து தேசந்திரம் தேசந்திரமாகப் இறைப்பயணம் மேற்கொண்ட குணங்குடியார் தம்முடைய இறுதிகாலங்களில் சென்னை ராயம்புரம் பகுதியில் கழித்திருக்கிறார்.சென்னையில் அவர் வசித்த பகுதியே தண்டியார் பேட்டை என்றும் பின்னால் அதுவே தண்டையார்ப்பேட்டையாகவும் ஆகி இருப்பதாக இசை அறிஞர் நா.மம்மது தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து இறைநிலை எய்திய ஒருவரைப்பற்றிய செய்திகள் மக்கள் வழக்கில் இருப்பதுதான் என்னைக் கவர்ந்தது.</p>
<p style="text-align:justify;">ஏட்டில் எழுதிவைப்பதை விட காற்றில் எழுதி வைப்பதுதான் காலங்கடந்த ஆய்வுக்கு உதவுகின்றது.வழி வழியாக மக்கள் அப்பாடல்களை தங்கள் புழங்கத்தில் ஒன்றாக பாவித்து அதற்கு காவிய அம்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.சூஃபி ஞானிகளைப் பற்றிய விவாதத்துக்குள் நான் நுழைய விரும்பவில்லை.அவர்கள் ஏக இறைவனை புகழ்ந்தார்கள் அல்லது ஏக இறைவனுக்கு மாறுபாட்டை தருவித்தார்களாக என்பதைப் பற்றி தெளிய ஞானமும் மதம் தொடர்ப்பான பார்வையும் அவசியம்.எனக்கு மதங்கள் நிறுவனமயமாவதில் உடன்பாடு இல்லை என்பதால் குணங்குடியாரின் பாடல்களை இலக்கிய நயத்திற்காக திரும்பத் திரும்ப கேட்டு வருகிறேன்.பாடலுக்கு உள்ளே போனால் நாமும் சித்த மனநிலையை எய்திவிடலாம் போல்தான் தோன்றுகிறது.இந்தக் குணங்குடியாரை வெறும் பாவலராக அணுகாமல் சமய நல்லணக்கக்காரராக பார்த்து ஏனைய மதப் பாவலர்கள் புகழ்ந்திருப்பது தனிச்சிறப்பு.குறிப்பாக,திருத்தணிகை சரவணபெருமாள் அய்யர்,கோவளம் சபாபதி முதலியார்,வேங்கட ராயப்பிள்ளை முதலானோர் மஸ்த்தான் சாகிபுக்கு சீடர்களாக இருந்திருக்கிறார்கள்.<br />
<strong>துவளும் துடியிடையும்</strong><br />
<strong>தோகை மயில் நடையும்</strong><br />
<strong>பவள இதழும் என்று பார்ப்பேன்</strong><br />
<strong>மனோன்மணியே</strong><br />
- என்று அவர் இறைவனைக் காதலியாக பாவித்துப்பாடும் கண்ணிகளை படிக்க படிக்க மெய் சொக்குகிறது.இப்படி கூட பாடமுடியுமா இறைவனை என தோன்றும் அளவுக்கு எத்தனையோ அற்புதமான கண்ணிகள்.<br />
 <br />
<strong>என்னைவிட்டால் எத்தனையோ</strong><br />
<strong>மாப்பிள்ளைமார் உந்தனுக்கே</strong><br />
<strong>உன்னைவிட்டால் பெண் எனக்கு</strong><br />
<strong>உண்டோ மனோன்மணியே</strong><br />
- என்று ஆரம்பித்து மிக நீளமாகச் செல்லும் இக்கண்ணிகளில் ஓசையும் ஒழுங்கும் விரவிவரும் இலக்கிய தத்துவ சிந்தனைகளையும் எழுதி புரியவைக்க இயலாது.நீங்களாக படித்தும் கேட்டும் உணர்ந்தும் கொள்ள வேண்டியவை.குணங்குடியாரின் பாடல்களைப் பற்றி எழுதுவதற்கு முதலில் இரண்டு காரணம்.ஒன்று பாலமுருகன் அனுப்பிய ஒலிச்சுட்டி.மற்றது பாடகி ஆஷாபோன்ஸ்லேயின் கின்னஸ் சாதனை.ஒருவர் இருபதுமொழிகளில் பதினாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார் எனக்கேட்கவே ஆச்சர்யமாயிருக்கிறது.தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடியிருப்பார் எனத் தெரியவில்லை.ஆனால்,நிச்சயமாக இருபது மொழிகளில் பாடியிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.இந்திப்படங்களில் பாடுபவர்களுக்கே இந்தியாவின் பிராந்திய மொழிகளில் பாடும் வாய்ப்புக் கிடைக்கிறது.வாணிஜெயராம் இந்தியில் பாடி அப்பாடல் வெளிவந்த சமயத்தில் அப்பாடல் தாங்கிய ஒலிநாடாக்களை மொத்தமாக வாங்கி யாரோ சில இந்தி வாலாக்கள் மறைத்தும் சிதைத்தும் எரித்தும்விட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.</p>
<p style="text-align:justify;">அவ்வளவுதான் தமிழ்ப் பிரதேச கலைஞர்களுக்கு இந்தியா அளிக்கும் வெளி.ஆறுமுறை தேசிய விருதைப் பாடலுக்காக வாங்கி இருக்கும் கவிஞர்.வைரமுத்துவின் வரிகளை இந்திக் கவிஞர்கள் எத்தனைபேர் உள்வாங்கி தங்கள் பாராட்டைத் தெரிவித்தார்கள் என்பதும் கேள்விக்குறியே.கின்னஸ் சாதனை செய்திருக்கும் ஆஷா போன்ஸ்லே தமிழில் பாடிய பாடல்களில் ஒன்று என்னுடையது என்பது நான் சொல்லியே உங்களுக்குத் தெரிய வேண்டிய நிலை.சந்திரமுகி திரைப்படத்தில் கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடலை அவர் பாடியபோது உடனிருந்தேன்.உச்சரிப்புக்காக அவர் ஏறக்குறைய ஆறுமணி நேரத்துக்கு மேலாக அவர் அவதிப்பட்டார்.தமிழில் ஒரு பாடலுக்கு ஆறுமணி நேரம் அவதிப்பட இருந்ததென்றால் இருபது மொழிகளிலும் அவர் பாட எத்தனை மணிநேர அவதிக்கு ஆளாகியிருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்.இன்றும் மும்பைப் பாடகர்களுக்கு தமிழ் இசையமைப்பாளர்களிடம் தனி மரியாதை உண்டு.காரணம்,நம்முடைய இசையறிவை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.ஆனால்,தங்களுக்கான வெளியை விட்டுத்தர விரும்புவதில்லை.</p>
<p style="text-align:justify;">ஏ.ஆர்.ரகுமானின் வருகைக்குப்பின் தமிழ்ச் சினிமாவின் வியாபார வெளி பரவியிருக்கிறதே தவிர தமிழ் இசையின் மகிமை உணரப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.அரபு இசையும் மேற்கத்திய இசைக்கோர்ப்புகளையும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த அளவுக்கு நம்முடைய நாட்டுப்புற இசை மேதமைகளை உலகுக்கு இட்டுச்செல்லவில்லை எனலாம்.ஒருமுறை ஆனந்தவிகடன் நேர்காணலில் குணங்குடியார் பாடல்களுக்கு இசைவடிவம் தர இருப்பதாகத் தெரிவித்தார்.ஆனால்,அது இன்னும் காரிய சித்தி பெறவில்லை.என்னவளம் இல்லை இந்தத்திருநாட்டில் என்பதுபோல இசையும் கவிதையும் நம்மால் இன்னும் முழுமையாக நுகரப்படவில்லை.முழுமையாக நுகரவதற்கானப் பயிற்சியை நாமின்னும் பெறவில்லை.ஆஷாவின் சாதனைக்காக இந்திப்பட உலகம் நிகழ்த்தும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில் இருப்பதையும் தேடி எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமே என வருத்தம் கவ்வுகிறது.</p>
<p style="text-align:justify;"><strong>வேட்டை பெரிதென்றே</strong><br />
<strong>வெறிநாயைக் கைப்பிடித்தே</strong><br />
<strong>காட்டில் புகலாமோ</strong><br />
<strong>கண்ணே றகுமானே</strong><br />
 <br />
- என்ற குணங்குடியாரின் பாடலை நினைத்துக்கொள்வோம்.வேட்டைக்கு உரியதை விட்டுவிட்டு வீட்டுத் தேவைக்காகவே கலையும் இலக்கியமும் செய்துகொண்டிருக்கும் நம்முடைய சூழ்நிலையை என்னவென்பது.<br />
 </p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=836&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/11/07/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தெரு நங்கைகள்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/08/06/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/08/06/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 06 Aug 2011 15:32:15 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=820</guid>
		<description><![CDATA[அரவாணிகளைப் பற்றி அவ்வப்போது நினைத்துக்கொள்வதும் அவர்களின் நிலை குறித்து விவாதிப்பதுமாக பத்திரிகைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.மறுக்கப்பட்ட வாழ்வில் இருந்து அவர்கள் தங்களை ஊடகங்களின் வாயிலாக மீட்டெடுக்க முயல்வதும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளன.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில்பாராட்டுக்குரியன.தவிர,அரவாணிகள் எழுதிய நூல்கள் விற்பனையில் சாதனைப் படைப்பதாகவும் கேள்வி.விற்பனை ஆகிறதென்றால்  பிரச்சனைகளை மேலும் மேலும் ஊதிப் பெருக்குவதில் நம்முடைய ஊடகத் தோழர்களின் உதவிக்கு இணையே இருக்காது.எதையும் பரபரப்பாக்கி அந்த பரபரப்பை நமக்குள் பற்ற வைப்பதில்தான் தொலைக்காட்சிகளின் செய்திப் பிரிவுகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.பிடதி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=820&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><strong>அ</strong>ரவாணிகளைப் பற்றி அவ்வப்போது நினைத்துக்கொள்வதும் அவர்களின் நிலை குறித்து விவாதிப்பதுமாக பத்திரிகைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.மறுக்கப்பட்ட வாழ்வில் இருந்து அவர்கள் தங்களை ஊடகங்களின் வாயிலாக மீட்டெடுக்க முயல்வதும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளன.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில்பாராட்டுக்குரியன.தவிர,அரவாணிகள் எழுதிய நூல்கள் விற்பனையில் சாதனைப் படைப்பதாகவும் கேள்வி.விற்பனை ஆகிறதென்றால்  பிரச்சனைகளை மேலும் மேலும் ஊதிப் பெருக்குவதில் நம்முடைய ஊடகத் தோழர்களின் உதவிக்கு இணையே இருக்காது.எதையும் பரபரப்பாக்கி அந்த பரபரப்பை நமக்குள் பற்ற வைப்பதில்தான் தொலைக்காட்சிகளின் செய்திப் பிரிவுகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.பிடதி சாமியார் நித்தியானந்தா தான் ஆணுமல்ல பெண்ணுமல்ல அனைத்தையும் கடந்தவர் என்று  பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப்போக உடனே, ஒரு நிருபர் நித்தியானந்தாவை அப்படியானல் நீங்கள் ஒன்பதா எனக்கேட்டு அதுவும் சுவாரஸ்யமான செய்தியாக்கப்பட்டிருக்கிறது.நிருபராகப் பணியாற்றும் ஒருவருக்கு இருக்க வேண்டிய சமூக மற்றும் உளவியல் அறிவை குறித்து சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனம் பரீசிலிக்க வேண்டும்.ஒருவர் அரவாணியாக இருப்பது அத்தனை கேலிக்கும் கேட்டுக்கும் உரியதா.</p>
<p style="text-align:justify;">தொடர்ச்சியாக அரவாணிகளைப் பற்றிய செய்திப்படங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.அவர்களின் போராட்டங்கள் முதன்மையான செய்தியாக்கப்படுவதும் கூட அக்கறையினால் அல்ல என்பதே நிதர்சனம். என்னுடைய தலையாய கவலைகளில் ஒன்று, அவர்கள் திரைப்படங்களில் காட்டப்படும் விதம்.வெறும் கேலிப் பொருளாக பாவிக்கப்படும் கொடுமை.இந்த கொடுமைக்கு நிரந்தர முடிவு கட்டியே ஆகவேண்டும்.காட்சிகளில் புதிது செய்கிறேன் பேர்வழி என்று நாலாந்தர படைப்பாளர்கள் செய்யும் அசட்டுத் தனங்களை காரி உமிழத்தோன்றுகிறது.தணிக்கைத் துறையில் ஒருவர் கூட அரவாணிகள் மீது கரிசனம் உடையவராக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.</p>
<p style="text-align:justify;">நம்முடன் சகஜீவியாக வாழத் தளைப்படும் ஒரு சமூகத்தை இத்தனை கொச்சையாக சித்திரிக்கிறார்களே என்று அவர்களுக்கு துளியும் வருத்தமோ இரக்கமோ தோன்றாமல் இருப்பது ஆச்சர்யமல்ல.அநீதி.அது எப்படி அவர்கள் தயாரிப்பாளர்களின் டி.போண்டாவில் மயங்கி எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்களோ. கூட்டமாகச் சேர்ந்து கும்மியடிக்கும் பாடல் என்றால் தவறாமல் நாலைந்து அரவாணிகளை அக்காட்சியில் இடம் பெறச் செய்கிறார்கள்.அதைவிட அக்காட்சிகளில் அவர்கள் பேசும் வசனங்கள்.நாராசத்தின் உச்சம்.அப்படியாக ஒரு அரவாணி பேசச் சாத்தியமே இல்லாத வசனங்களை வலிந்து திணித்து தங்கள் மேதாவிலாசத்தை மேன்மைப் படுத்திக்கொள்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">இன்னொரு விஷயம்.அரவாணிகளைப் பற்றி பேசுவதும் எழுவதும் ஏதோ கிளுகிளுப்பூட்டும் விஷயமாகச் சிலருக்குத் தோன்றுகிறது.உண்மையில்,அவர்களின் வாழ்க்கை வலி நிறைந்தது.அவர்களால் வெளிப்படுத்த முடியாத எத்தனையோ உணர்வுகளை நம்மால் கற்பனைக்கூட  செய்ய முடியாது அளவுக்கான விநோதம்.தங்களை மூன்றாம் பாலினமாகச் சொல்லிக்கொள்ளும் அரவாணிகள் சமீபத்தில் சேலம் பேருந்து நிலையத்தில் நிர்வாணக்கோலத்தில் அடித்துக்கொண்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. சண்டைக்கான காரணம், விபச்சாரத்திற்கு உட்பட மறுத்த ஒரு குழுவை இன்னொரு குழு வலுகட்டாயப்படுத்தியிருக்கிறது அவ்வளவே. விரும்பாத ஒன்றை தங்கள் மீது திணித்தற்காக எழுந்த கோபமே சண்டையாக உருவெடுத்து தெருவில் நிர்வாணக் கோலத்தில் நிற்க நேர்ந்திருக்கிறது.இவ்வளவையும் வேடிக்கை பார்த்த சமூகம் தடுக்கவோ தகராறை விலக்கிவிடவோ முன்வரவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. திருநங்கைகள் இன்னும் எத்தனை காலத்திற்குத் தெரு நங்கைகளாகவே பார்க்கப்படுவார்களோ.</p>
<p style="text-align:justify;">தொடர்ந்து என்னுடைய துள்ளலிசைப் பாடல்களில் அரவாணிகள் பாடுவது போல சில வரிகளை இணைக்க இயக்குநர்கள் விரும்புகிற போதெல்லாம் நான் அன்போடு தவிர்த்து வந்திருக்கிறேன்.எனக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை நாகரீகமாக மறுத்துவிடுகிறேன். மேலும் வற்புறுத்தினார்கள் என்றால் அவ்வாய்ப்பையே தவிர்த்துவிடுவது என் வழக்கம்.நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை எதற்காகவும் விட்டுத்தர நான் துணிவதில்லை.எனக்கு சந்தோசமும் கேட்பவர்க்கு உற்சாகமும் தரவே திரைப்பாடல் துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.அதற்கே கேடு என்றால் எதற்காக அப்பணியைச் செய்ய வேண்டும்.குறைந்தபட்ச சமரசங்கள் மொத்த வாழ்வையுமே கேவலப்படுத்திவிடக் கூடாது இல்லையா.சந்தோசம்,உற்சாகம் இரண்டு மட்டுந்தானா படைப்பின் தேவை எனக் கேட்கலாம்.நிச்சயமாக இல்லை.இரண்டுக்கு மேலேயும் சமூக அக்கறை என்ற ஒன்றிருக்கிறது.அதுவே,பிரதானம்.</p>
<p style="text-align:justify;">சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஊர் பெருமையைப் பற்றிய விவாதம் நிகழ்ந்தது.ஊரை நேசிப்பவர்கள்,ஊரை வெறுப்பவர்கள் என்று இரண்டு குழுக்கள்.இரண்டு குழுவிலும் சரியான டுபாக்கூர்களைப்  பொறுக்கி எடுத்து உட்கார வைத்திருந்தார்கள்.நடுவர் வழக்கம் போல இரண்டு குழுக்களின் கருத்தையும் உள்வாங்கி தானொரு பெரிய டுபாக்கூர் என்பதாக தீர்ப்புரைத்தார்.இரண்டு குழுக்களுக்கு மத்தியில்  சிறப்பு விருத்தினர்களாக இரண்டு பேர்.அதில் ஒருவர் தனக்கு பிடித்தது டிகிரி காப்பி என்றதும் இதுகூட  ஊரை நேசிப்பதால் வந்த பழக்கமே என்றார் நடுவர்.உடனே சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஸ்பெஷல் டுபாக்கூர் அசடு வழிந்தது நிகழ்ச்சியின் ஹை லைட்.</p>
<p style="text-align:justify;">அந்நிகழ்ச்சியில்,ஊரின் பெருமைகளை பேசுவதும் ஊரை நினைவில் வைத்திருப்பதும் நம்முடைய அடையாளம் என்பது மாதிரி அலசினார்கள்.ஊரின் அடையாளத்தைச் சொல்வது மேல்சாதிக்காரர்களின் சாதிப் பெருமிதம் என்பதை ஏனோ யாருமே சொல்லவில்லை.அல்லது சொல்ல விடவில்லை.எடிட்டிங்கில் தங்கள் கருத்துக்கு ஏற்ப கத்திரி போடுவதில்  நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கை தேர்ந்தவர்களாயிற்றே.தான் இந்த ஊர்க்காரன் என்று சொல்வதன் மூலம் இன்ன சாதிக்காரன் என்னும் அடையாளத்தைப் பிறர் கண்டுபிடிக்க வைத்திருக்கும் உத்தியாகவே பார்க்க வேண்டும்.வட ஆற்காடா,தஞ்சாவூரா,நெல்லையா,மதுரையா என்றால் உடனே அங்கே இன்னாருக்கு நீங்கள் சொந்தமா என்று அடுத்தக் கேள்வியைச் சொடுக்காத ஒருவரை நான் சந்தித்ததில்லை.இப்படி ஊர் பெருமை பேசிக்கொண்டு ஒரு அரவாணியால் வாழ முடியுமா. நான் மன்னார்குடி என்றால் அந்த ஊரில் இருந்து அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவருக்குச் சொந்தமா என்பதும் திருவாரூர் என்றார் முன்னாள் முதல்வருக்கு தூரத்து உறவா என்பதும் தொடர்ந்து  நடத்தப்படும் விசாரணைகள்.பெரும்பாலும் நகரங்களிலேதான் அரவாணிகள் வாழ்ந்து வருகிறார்கள்.ஏன்,என்றால் அவர்களால் தங்கள் சொந்த ஊர்களில் வசிக்க முடிவதில்லை.வசிக்க முடிந்திருந்தால் அவர்கள்  ஏன் நடுரோட்டுக்கு வந்து நிர்வாணக் கோலத்தில் சண்டை போடவேண்டும்.இதையெல்லாம் டுபாக்கூர்கள் மருந்துக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.</p>
<p style="text-align:justify;">உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதுதான் ஊரின் பெருமை.சேரிகள் ஊரில் வராது.நீங்கள் எந்தச் சேரியைச் சேர்ந்தவர் என்று யாரையாவது பார்த்து நாம் கேட்கிறோமா.சேரி இழுக்குடையது.சேரிகளில் வாழ்வோர் விசாரிப்புக்குரியவர் அல்ல.அவர்கள் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டவர்கள்.உழைக்கவும் உழைப்பின் அசதிக்காக குடிக்கவும் பழக்கப்படுத்தப்பட்டவர்கள்.அவர்கள் தங்கள் சேரியை எந்த நிகழ்ச்சியிலும் அட்டனக்கால்போட்டுக்கொண்டு அலச முடியாது.எங்கள் சேரியில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம் என்று முழக்க முடியாது.நிகழ்ச்சியில், வியாபாரத்திற்காக பெரு முதலாளிகள் நம்முடைய ஊரின் அடையாளத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் நாம் நம்முடைய ஊரை எக்காரணம் கொண்டும் மறந்துவிட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிடக் கூடாதென்றும் டுபாக்கூர் குழுக்களின் நடுவர் கோர்ட்டை மாட்டிக்கொண்டு கருத்து தெரிவித்தார்.அய்யா,ஊரின் அடையாளத்தை முதலில் உங்கள் உடையிலாவது நீங்கள் கடைபிடிக்கலாமே.</p>
<p style="text-align:justify;">பெருமுதலாளிகள் நடத்தும் தொலைக்காட்சியில் கருத்துருவாக்க மனிதனாக உள்ள நீங்கள் கோர்டை எந்த ஊரின் அடையாளமாகப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.உடையோ,ஊரோ,ஒருவரை அடையாளப்படுத்திவிட முடியாது என்பதால் உங்கள் வாதம் பக்கவாதமாகத் தோன்றுகிறது.முடக்குவாதமாக முன்னேறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.அரவாணிகள் பற்றி சொல்ல வந்துவிட்டு வேறு எங்கோ போய்விட்டதாக நினைக்காதீர்கள். இத்தனை பத்திரிகைகள்.இத்தனை தொலைக்காட்சிகள்.இத்தனை கருத்து கந்தசாமிகள்.ஆனால்,அவற்றில் ஒரு நிகழ்ச்சியிலாவது கருத்து சொல்லும் இடத்தில் அரவாணிகள் அமர்த்தப்படுகிறார்களா.அவர்களிடம் ஊரில் வாழ்வது பெருமையா ஊரைவிட்டு ஓடிவந்தது பெருமையா என்றால் கூடுதலாக ஊரின் லட்சணத்தைத் தெரிந்துகொள்ள முடியுமே.ஏன் அமர்த்தவில்லை நாங்கள் நிறைய நிகழ்ச்சிகளில் அமர்த்தியிருக்கிறோமே என்பார்கள்.அப்படியா என நாமும் ஆவலோடு விசாரித்தால் அந்த நிகழ்ச்சிகள் யாவும் அரவாணிகள் தொடர்பானவையாக இருக்கின்றன.பொதுவெளியில் சகல விஷயத்திற்கும் அவர்கள் கருத்து சொல்லும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நான் சொல்ல வருவது.மூன்றாம் பாலினர் இரண்டு பாலினரைவிடவும் அதிகமாகச் சமூகத்தை உணர்ந்தவர்களாக நான் கருதுகிறேன்.அவர்களுக்கே மெய்யான சமூக எதார்த்தம் தெரியும்.வேலை வாய்ப்பில்,வேண்டியதைப் பெறுவதில் என எல்லாவற்றுக்கும் அல்லப்படும் அவர்கள் நா.காமராசன் சொல்வதுபோல் சந்ததிப்பிழைகள் அல்ல.சமூகத்தால் பிழையாகப் பார்க்கப்படும் பிறவிகள்.</p>
<p style="text-align:justify;">ரேனி குண்டா என்னும் திரைப்படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குநராக தெரிய வந்த பன்னீர்செல்வம் என் நண்பர்களில் ஒருவர்.அவர்,வழக்கமான சினிமாவையும் சினிமாத்தனங்களையும் வெறுப்பவர்.இளம் குற்றவாளிகளைப் பற்றிய திரைப்படமான ரேனி குண்டாவில் ஒரு விபச்சாரி தன் ஊமைத் தங்கையின் வாழ்வுக்காக தவிக்கும் தவிப்பை தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தார்.குடிகார கணவனால் தன்னுடைய தங்கையும் தன் போல் ஆக நேரும் பட்சத்தில் அவளை ஒரு கொலைகார இளைஞனோடு அனுப்பிவைக்க எண்ணுகிறாள்.அதற்காக ஒரு பாடல் எழுதித்தரும்படி அவர் கேட்க,ஆச்சர்யம் தாளாமல் அப்பாடலை வெகு சிரத்தையோடு எழுதிக்கொடுத்தேன்.ஒரு திரைப்படத்தில் பாடலின் அவசியம் இம்மாதிரியான சூழலுக்கு எழுதும்போதே நியாயப்படுகிறது.விளிம்பு நிலை மனிதர்களே அப்படத்தின் கதாபாத்திரங்கள்.தன்னைவிட தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் அற்புதமான பதிவுகள்.குற்றம்தான்.கோழைத்தனம்தான்.அயோக்கியத்தனம்தான்.ஆனால்,அதுவல்லவா வாழ்க்கையாகவும் எதார்த்தமாகவும் இருக்கின்றன என்பதுதான் கதையின் மைய்யம்.அதை அவர் சொன்னவிதத்திலும் காட்சிபடுத்திய விதத்திலும் சிலருக்கு மாற்று அபிப்ராயம் இருந்த போதிலும் அத்திரைப்படம்  முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று.அப்படத்திற்கு முதலில் எழுத்தாளர். ஜெயமோகனே வசன கர்த்தாவாக வேண்டப்பட்டு பிறகு ஜெயமோகனின் அறிவு மற்றும் அறிவுரை நெருக்கடி தாங்காமல் பன்னீர்செல்வம் அழுத கண்களோடு திரும்பியது தனிக்கதை.</p>
<p style="text-align:justify;">தற்போது <strong>18வயது</strong> என்றொரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.அத்திரைப்படத்திற்காக அரவாணிகளைப் பற்றி ஒரு பாடல் எழுத அழைத்திருந்தார்.அப்பாடலில் அரவாணிகள் தங்கள் வாழ்வை தாங்களே கூறுவதுபோலவும் இதுகாரும் வெளிவராத அவர்கள் உணர்வுகளை பாடல் வடிவத்தில் வரவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.அப்பாடலைப்பற்றி மேலதிகச் சிலாகிப்புகளை நான் சொல்லப் போவதில்லை.நான் எழுதியதால் அப்பாடல் சிறப்பு என்றோ அதுவே அரவாணிகளைப் பற்றிய முதல் பாடல் என்றோ சொல்வதுபோன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை.ஆனால்,அப்படி ஒரு பாடல்  எழுதப்பட்டது என்பதை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனெனில்,நம்முடையத் தொலைக்காட்சிகள் அப்பாடலை வியாபார நோக்கத்தோடு அணுகி ஒளிபரப்பாமலேயே கூடப் போகும் அபாயமிருக்கிறது.<br />
1.<br />
ஆணும் இல்ல பெண்ணும் இல்ல<br />
ஆனா நாங்க நடுவில<br />
வீடு இல்ல வேல இல்ல<br />
வாழுறோமே தெருவுல</p>
<p style="text-align:justify;">கடகடயா ஏறி இறங்கி<br />
காசுவாங்கிப் பொழைக்கிறோம்<br />
புடவ கட்டி பலதினுசா<br />
உதட்டதானே சுழிக்கிறோம்</p>
<p style="text-align:justify;">அப்பன் வெச்ச பேர மாத்தி<br />
வேற பேரு வக்கிறோம்<br />
ஒதுங்கக்கூட வழியில்லாம<br />
ஓரத்திலே நிக்கிறோம்</p>
<p style="text-align:justify;">2.<br />
வேலகேட்டு போயி நின்னா<br />
வெரட்டுறாங்க வெளியில<br />
வேறவேல செய்யச் சொல்லி<br />
மெரட்டுராங்க மறைவுல</p>
<p style="text-align:justify;">அருவருப்பா பாத்துதானே<br />
அதட்டுறாங்க ஆளுங்க<br />
ஆண்டவன செஞ்ச தப்பு<br />
கேட்குறது யாருங்க? </p>
<p style="text-align:justify;">கேடுகெட்ட பூமியில<br />
கேவலமா இருக்கிறோம்<br />
சொந்தநாட்டில் அகதிபோல<br />
எங்க நாங்க சிரிக்கிறோம்</p>
<p style="text-align:justify;">3.<br />
ராசியின்னு எங்க மூஞ்சில்<br />
முழிக்கிறாங்க வடக்குல<br />
வாக்குச்சீட்டு இப்பக்கூட<br />
எங்களுக்குக் கிடைக்கல</p>
<p style="text-align:justify;">வருஷத்துக்கு ஒரு தடவ<br />
விழுப்புரத்தில் கூடுறோம்<br />
தாலிகட்டி விதவையாகி<br />
தனித்தனியே பிரியறோம்</p>
<p style="text-align:justify;">தெரிஞ்சவங்க யாரும்வந்தா<br />
ஓடிப்போயி பதுங்குறோம்<br />
எப்ப வாச்சும் வீட்ட எண்ணி<br />
கண்ணு நாங்க கலங்குறோம்</p>
<p style="text-align:justify;">- இந்தப்பாடலை எழுதி முடித்து ஒலிப்பதிவுக் கூடத்தைவிட்டு வெளியேறும்போது அவசியமான ஒரு செயலைச் செய்த திருப்தி ஏற்பட்டது.அரவாணிகளைக் கண்டு சிரிக்கவும் கைநீட்டி கேலி பேசவும் முனையும் ஒரு சமூகம் இப்பாடலைக் கேட்டு இரண்டு சொட்டாவது கண்ணீர் விடும் என நம்புகிறேன்.வாழ்க்கையில் இப்படி எத்தனையோ திரையில் பதிவு செய்யப்படாத விஷயங்கள் இருக்கின்றன.அதையெல்லாம் ஒரு இயக்குநர்,கதாசிரியர் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை.இம்மாதிரியான பாடல்கள் வெற்றி பெற்றுவிட்டால் உடனே இதே மாதிரியான பாடல்களை எல்லா நிறுவனங்களும் செய்யத் தொடங்கும்.அவசர அவசரமாக வெற்றி பெறுவதற்கு வெற்றியின் நகலைத் தேடும் மனோபாவம் நம்மிடமிருந்து எப்போது வெளியேறுமோ.அரவாணிகளின் வாழ்வை முழு நீள திரைப்படமாக்கும் முயற்சியில்  இயக்குநர் சிவா இறங்கியிருக்கிறார்.பால் என்னும் பெயரில் உருவாகிக்கொண்டிருக்கும் அத்திரைப்படத்திற்கு இசை ரமேஷ் விநாயகம்.</p>
<p style="text-align:justify;">தமிழ் சினிமாவின் களங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.மாற்றத்தை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள் என்பது தேர்தலில் இருந்து நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.ஆனால்,அது வளர்ச்சியை நோக்கிய மாற்றமா அல்லது ஏமாற்றமா என்பது போகப்போகத் தெரியவரும்.சொல்வதில் புதுமையும் நேர்த்தியும் இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்பதை மைனா, தெய்வத் திருமகள் திரைப்படங்கள்  உணர்த்தியிருக்கின்றன.உற்று நோக்கக் கற்றுக்கொண்டால் உலகம் நம்மை கவனிக்கத் தொடங்கும்.</p>
<p style="text-align:justify;"> </p>
<p style="text-align:justify;"> </p>
<p style="text-align:justify;">
 </p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=820&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/08/06/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காமூஷியாவும் கருணாகரனும்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/06/27/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%82%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/06/27/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%82%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Mon, 27 Jun 2011 14:16:17 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=816</guid>
		<description><![CDATA[ எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதைவேறு எழுத வேண்டுமா என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதை கூட எழுதாமல் போய்விட்டேன்.இப்போது எழுதி யார் சாபத்துக்கு ஆளாகப்போகிறேனோ.கருணாகரனுக்கு அவ்வப்போது இம்மாதிரி எண்ணங்கள் வருவதுண்டு.எதைச் செய்தாலும் அதை செய்வதற்கு முன்பே நூத்தியெட்டு முன் அபிப்பாரயம் வந்துவிடும்.அந்த அபிப்ராயத்திற்கு அவனே மரியாதை தராததுதான் இதில் விசேஷம்.சமீப காலங்களில் அவனுக்கு ஒரு காதல் வந்து அந்தக் காதல் அவனை ராவும் பகலும் புரட்டி எடுக்கிறது. தெருநடையில் அவனை அறியாமல் சிரித்துவிடுவதும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=816&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"> <strong>எ</strong>ழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதைவேறு எழுத வேண்டுமா என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதை கூட எழுதாமல் போய்விட்டேன்.இப்போது எழுதி யார் சாபத்துக்கு ஆளாகப்போகிறேனோ.கருணாகரனுக்கு அவ்வப்போது இம்மாதிரி எண்ணங்கள் வருவதுண்டு.எதைச் செய்தாலும் அதை செய்வதற்கு முன்பே நூத்தியெட்டு முன் அபிப்பாரயம் வந்துவிடும்.அந்த அபிப்ராயத்திற்கு அவனே மரியாதை தராததுதான் இதில் விசேஷம்.சமீப காலங்களில் அவனுக்கு ஒரு காதல் வந்து அந்தக் காதல் அவனை ராவும் பகலும் புரட்டி எடுக்கிறது.</p>
<p style="text-align:justify;">தெருநடையில் அவனை அறியாமல் சிரித்துவிடுவதும் நேரங்கிடைக்கையில் எல்லாம் விட்டத்தை வெறிப்பதுமாக இருக்கிறான்.கழுத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருள்கிறது என்று வைரமுத்து எழுதியதுபோல.நீங்கள் கவனிக்க வேண்டியது காதல் கருணாவுக்குத்தானே தவிர அவன் காதலிப்பதாக சொல்லும் பானுமதிக்கு இல்லை.இவனாக பானுமதியைச் செல்லம் என்று அழைப்பதா இல்லை அம்மு என்று அழைப்பதா என யோசித்துக்கொண்டிருக்கிறான் அவ்வளவுதான்.பானுமதியை  அவன் குடியிருக்கும் வீட்டுக்கருகே உள்ள பலசரக்குக்கடையில்தான் முதல்முதலில் சந்தித்தான்.தன்னுடைய காதல் ஒரு பலசரக்குக் கடையில் தொடங்கியதே என்னும் வருத்தம் இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு ஏகமாய் இருக்கவே செய்தது.என்னசெய்ய எங்கே இருந்து தொடங்கினும் காதல் காதல்தானே.<br />
அவனுடைய காதல் ஆரம்பம் எப்படி என்று கேட்டால் சிரித்துவிடுவீர்கள்.</p>
<p style="text-align:justify;">இவன் தன்னுடைய துணிகளைத் துவைப்பதற்குச் சவுக்காரம் வாங்கப்போக பானுமதியும் தன்னுடைய துணியை வெளுப்பதற்காக சவுக்காரம் வாங்க அதே பலசரக்குக் கடைக்கு வந்திருக்கிறாள்.சவுக்காரம் என்றால் சோப்பு என்றுகூட தெரியாதவர்கள் கருணாகரனின் காதல் கதையைக் கேட்க தகுதியற்றவர்கள் என்றே நினைக்கிறேன்.தெரிந்தவர்களுக்காக கதையைத் தொடருகிறேன்.ஒரு குறிப்பிட்ட சவுக்காரத்தை இரண்டுபேரும் கேட்க கடைக்காரர் ஒன்று மட்டுமே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.உடனே,பிரிய மிகுதியில் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று பானு சொல்லப் போக கருணாவின் காதலுக்குப் பிள்ளையார் சுழி விழுந்தது.காதலித்த பிறகுதான் சோப்புப்போட வேண்டும்.ஆனால்,கருணாவுக்கோ சோப்புதான் காதலையே உண்டாக்கியிருக்கிறது.தனக்கு தேவையாய் இருந்தபோதும் அதை எனக்காக விட்டுக்கொடுத்தாளே என்னும் அங்கலாய்ப்பில் மாய்ந்து மாய்ந்து அவள்மீது காதல்கொள்கிறான்.</p>
<p style="text-align:justify;">இதுவரை சோப்பு கம்பெனிகள் தயாரித்த சோப்புகளிலே அந்த சோப்பு மட்டுந்தான் மிக உயர்ந்ததென்று சொல்லும் அளவுக்கு அவன் காதல் கிறுக்குத் தலைகேறிவிட்டது.பாவி,அந்த சோப்பை அவள் விட்டுக்கொடுத்தாள் என்பதற்காக உபயோகிக்காமலேயே வைத்திருப்பதுதான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை.தினமும் அந்த சோப்பைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு வருவதாகவும் அவளும் அதே சோப்பை வாங்க நினைத்தமையால் தன்னுடைய கருத்தும் அவளுடைய கருத்தும் ஒத்திருப்பதாகவும் நினைத்து பெருமிதம் கொள்கிறான்.கடையிலிருந்து கருணா கிளம்பிய பிறகு அவள் வேறு சோப்பை வாங்கிக்கொண்டு போனது அவனறியாத, உபதகவல்.<br />
சோப்பில் இருந்து ஆரம்பித்த கருணாவின் காதல் பல்வேறு கற்பனை காட்சிகளோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.இப்போதெல்லாம் குறிப்பிட்ட சோப்பு விளம்பரம் தொலைக்காட்சியில் வந்தால் கூர்ந்து கவனித்து அதிலிருந்து விடுபட்டு வேறு சேனலுக்கு மாறவும் அவனுக்குத் தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.மின்னலடிக்கும் வெண்மை என்பது அவளுடைய பல்வரிசையாகவோ சிரிப்பாகவோ கருதி மெய்மறந்து கனவுகளில் ஆழ்ந்துவிடுகிறான்.அப்படி வரும் கனவிலும் சோப்பே செட் ப்ரார்ப்பட்டியாகவும் இருந்து அவன் காதலுக்கு ஆசி கூறுகிறது.அவள் வாங்க வந்தது சோப்பை அல்ல என்னைத்தான் என்று கவிதை வேறு.</p>
<p style="text-align:justify;">பானுமதி அந்தப்பகுதி வார்டு கவுன்சிலரின் ஒரே மகள்.கொஞ்ச காலம்வரை சாராய வியாபாரம் செய்த பானுவின் தந்தை ஒரளவு காசு சேர்ந்ததும் அதைவிட சிறந்த வியாபாரமான அரசியலில் குதித்துவிட்டார்.ஆரம்பத்தில் அச்சத்தோடு பார்த்த பகுதி மக்கள் இப்போது அவரைப்போல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.குடி குடியை மட்டுந்தான் கெடுக்கும்.அரசியல் நாட்டையே கெடுக்கும் என்பதால் அவர் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகிறார்.வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏவாகி அமைச்சரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.சாராயம் விற்கும்போதும் கூட ஒருசொட்டு அவர் பல்லில் பட்டதில்லை.அத்தனை யோக்கியத்துக்குரிவராக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.பல்லில் பட்டிருந்தால் கள்ளச்சாராயத்தால் செத்துப்போன முப்பத்திரெண்டு பேரில் இவரும் ஒருவராக இறந்திருப்பார்.மக்கள் எப்போதும் கெட்ட விஷயத்தை மறந்துவிடுகிறார்கள்.அதாவது,தாங்கள் கெட்ட விஷயத்தை.</p>
<p style="text-align:justify;">இன்றைய தேதிக்கு பானுமதியின் வீட்டில் இரண்டு கார்,வாடகைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு வீடு..என ஏற்குறைய முப்பது லட்சத்திற்கும் குறைவில்லாத சொத்து இருக்கிறது.சொத்து இருந்தாலும் பானுவோ பானுவின் அப்பாவோ அதை பெரிதாக கருதுவதில்லை.கடைக்கு தானே வந்து சோப்பு வாங்கும் அளவுக்கு எளிமை என்று வைத்துக்கொள்ளுங்கள்.அவர்கள் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டின் பின்போஷனில்தான் கருணாகரன் கடந்த பதினோரு நாள்களாகக் குடியிருந்து வருகிறான்.கருணா ஏதோ ஒரு சிற்றிதழில் உதவியாசிரியராக இருக்கிறான்.சிற்றிதழ்களில் பல ஆழமான நுட்பமான அதிநவீன விஷயம் எல்லாம்  வருவதாக நம்புபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.ஆனால்,ஒரு சோப்பு விஷயத்தில் தெளிவில்லாத ஒருவன் அதில் எப்படி உதவியாசிரியனாக இருக்கிறான் என்பதுதான் புரியாத புதிர்.</p>
<p style="text-align:justify;">நுரைபொங்கும் நீர்துகளில் வழியுமெனது பிரியங்கள் என்று கருணாவுக்கு எதை சிந்தித்தாலும் சோப்பைச் சுற்றியே சிந்தனை.ஒரு கட்டுரைக்கு அவருடைய ஆசிரியர் தலைப்பிடும் வாய்ப்பைக் கொடுத்தார்.அது,போப் ஆண்டவரைப் பற்றிய கட்டுரை.அவ்வளவுதான் கருணா, போப் ஆண்டவரை விட்டுவிட்டு  சோப் ஆண்டவர் என்று தலைப்பிட்டான்.ஆசிரியருக்கு கோபம் முற்றிவிட்டது.ஒரு மதத் தலைவரை இப்படித்தான் மரியாதைக் குறைச்சலாக எழுதுவார்களா என்று ஏதேதோ நாகரீக கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கினார்.அப்போதும் கருணா அசராமல் இல்லை சார்,போப் சிலருடைய பேச்சைக் கேட்டு நடப்பதாக வருகிறது இல்லையா அதனால்தான் போப், சோப் போடுகிறவர்கள் பின்னாலிருப்பதை நாசூக்காக கூறினேன் என்றான்.நீயும் ஆச்சு உன் நாசூக்கும் ஆச்சு வெளியே போ என்று சொல்லாத குறையாக முகத்தை ஆசிரியர் திருப்பிக்கொண்டார்.</p>
<p style="text-align:justify;">இலக்கிய சிற்றிதழில் வேலை பார்க்கும் கருணா தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முனைவதில்லை.காரணம் தான் செய்வது தவறு என்று அவன் ஒருபோதும் நினைப்பதில்லை.தனக்கு தெரிந்த சமூகம் தன்னைவிட அறிவு குறைந்து இருப்பதாகவே அவன் கருதுகிறான். ஆகப்பெரிய இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிய சிற்றிதழில் தான் பணிபுரிவதன் மூலம் தன்னையும் அவ்வாறாகவே கருதும் நிலைக்கு அவன் ஆட்பட்டிருந்தான்.யார் சொல்வதைவிடவும் தான் சொல்வது மிகச் சரியாக இருக்கும் எனும் நம்பிக்கை அவனை பைத்தியக்காரனாக்கிக்கொண்டிருந்தது.மூர்க்கம் மிக்கவனாகவும் ஆகாயத்திற்குக் கீழ் உள்ள அத்தனையும் தனக்கு அத்துபடி என்பதுபோலவும் அவனுடைய நடவடிக்கைகள் இருக்கும்.இத்தனை இருந்தும் அவனால் தன்னுடைய சோப்புக் காதலியிடமிருந்து மீள முடியாதுதான் பரிதாபம்.</p>
<p style="text-align:justify;">ஒருநாள் திடீரென்று அலுவலகத்திற்குப் போகாமல் அவளின் சௌந்தர்யங்கள் என எழுதத் தொடங்கினான்.அதை ஒரு குறுங்காவியமாக மாற்றிவிடுவது எனத்திட்டம்.அவளின் பார்வை,அவளின் உடை,அவளின் குறுநகை, அவளின் பவ்யம்,அவளின் கேசம்,அவளின் கால்நகம் என்பதாக தனித்தனி அத்தியாயமாக  எழுதும் ஆவல்.ஆவல் என்பதைவிட அதற்கு மேலாக ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்களேன்.இலக்கிய இதழில் பணியாற்றும் கருணா பானுவின் மீதூர்ந்த காதலால் புலனாய்வுப் பத்திரிகையாளனாகவும் தன்னை உருவகித்துக் கொண்டான்.ஏனெனில்,பானுவைப்பற்றிய குறுங்காவியத்திற்கு அவளுடைய குடும்பப் பின்னணியும் தேவைப்படுகிறது.அப்பா யார்? அம்மா எப்படி?உறவுகளின் நிலவரம் என சகலத் தகவல்களையும் சேகரிக்காமல் எழுத முடியாது இல்லையா.ஒருநாள் விடுப்பு போதாது என்பதால் மேலும் இரண்டு தினத்திற்கு தன்னுடைய விடுப்பை நீட்டித்தான்.விரைவில் வேலையையே விட்டுவிடுவான் போல தெரிகிறது.காவியம் எழுதுவதென்றால் சும்மாவா?</p>
<p style="text-align:justify;">காவியத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் முதலாவது பிரச்சனை.தான் அவளை முதல்முதலாக சந்தித்த பலசரக்குக்கடையிலிருந்து தொடங்கினால் அந்தக்கடை,கடைக்காரரின் பெயர்.வழக்கமாக அவள் சாமான்களை வாங்கவரும் நேரம்- எல்லாம் தெரிந்தால்தான் தன்னுடைய காவியம் சிறப்பாக வரும் என்னும் தீவிரமான யோசனைக்கு உட்பட்டு முதலில் கடைக்காரரிடம் தகவலைச் சேகரிக்கக் கிளம்பினான்.இதுவரை கருணாவுக்கு தன்னுடைய காதலியின் பெயர் பானு என்பது தெரியாது.எனவே,விசாரனையை முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.கடைக்காரரிடம் சோப்பு வாங்க வந்த நிகழ்வில் இருந்து&#8230;..அன்னைக்கு சோப்புவாங்க வந்த பொண்ணுப்பேரு தெரிமாண்ணே.தினமும் இருபது முப்பதுபேர் சோப்பு வாங்குறாங்க.நீ யார கேட்குற.அதான்ணே,அன்னக்கி நானும் அந்தப்பொண்ணும் ஒரே சோப்ப கேட்டோமே&#8230; நீங்க கூட ஒன்னுதான் இருக்குன்னு சொன்னீங்களே.என்னைக்கு? ஒருவாரத்துக்கு முன்னால,நான் கூட மீதி சில்லறைய வாங்காம போனேனே.என்னப்பா உளர்ற.நீ யாரு?</p>
<p style="text-align:justify;">நான் கவுன்சிலர் வீட்டில குடியிருக்கேன்ணே.குடிவந்து பத்து நாள் ஆவுது.நம்ம கடையிலதான் பொருளெல்லாம் வாங்குறேன்.நீங்கக்கூட ரொம்ப அன்பா நடந்துக்குவீங்களேன்ணே.கடை வச்சிருக்கிறவன் வாங்க வர்ற எல்லார்கிட்டேயும் அன்பாதான் நடத்துக்குவான்.நீ என்னமோ புதுசா கண்டதா பேசுற.போயிட்டு சாயந்திரம் வா.சாவகாசமா பேசலாம்.இப்ப வேல கெடக்கு.ஜனக்கு அரக்க பறக்க வேலைக்கு கிளம்புற நேரம் என்றதும் கருணாவின் முகத்தில் ஈயாடவில்லை.தன் காதலுக்கு உதவி புரியாத சமூகம் நாசமாய்ப் போகட்டும் என கருவினான்.எத்தனை பொறுப்பற்ற சமூகம் இது?</p>
<p style="text-align:justify;">காதலால் ஜாதியும் சடங்கும் சமயமும் ஒழியும் என்ற வெந்தாடிக்கிழவனின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத மூடப் பிறவிகள். இதே பாதையில் இச்சமூகம் நடைபோட்டால் ஒருக்காலும் உருப்பட போவதில்லை.மேற்குலகில் காதலை கொண்டாடும் இந்த நூற்றாண்டில் இன்னும் நம்முடைய தமிழ்ச் சமூகம் தன்னை அங்குலமளவும் மாற்றிக்கொள்ளத் துணியவில்லையே என்றெல்லாம் ஒருவாறு யோசித்துக்கொண்டே வீடு திரும்பினான்.மனதை சோப்புக்காரி துவைத்தெடுக்கிறாள்.அழுக்கான தன் ஆடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய ஞாபகம் வந்துவிடுகிறது.மாலைவரை காத்திருக்க வேண்டும்.எந்தக் க்ளுவும் கிடைக்கவில்லை.எங்கே யாரிடம் கேட்பதென்றும் விளங்கவில்லை.ஒன்று செய்யலாம்.விடுப்பெடுத்த இரண்டு நாளும் அந்தக் கடை வாசலிலேயே நின்றிருந்தாள் எப்படியும் அவளை பார்த்துவிடலாம்.இரண்டு நாளில் ஒருநாள் கூடவா அவள் சோப்பு வாங்க வராது போவாள்?</p>
<p style="text-align:justify;">கருணாவுக்கு லேசாக மயக்கும் வரத் தொடங்கியது.சுற்றி சுற்றி ஒன்றையே யோசித்து அவனுக்கு பழக்கமில்லை.உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவனுக்கு யோசித்தே பழக்கமில்லை.யாராவது எழுதுவதை நெட்ரூ போட்டு தான் சிந்தித்ததாக ஸ்தாபிப்பான்.அலாதியான மனப்பாட சக்தி உள்ளதால் தலைவர்களின் சிந்தனையாளர்களின் மேற்கோள்களை அவ்வப்போது ஒப்பிப்பான்.இரண்டாவது சந்திப்பில் ஒரே விஷயத்தை திரும்ப பேசுகிறோம் என்பதை அறவே மறந்துவிடுவான்.இதன் காரணமாக அவனுக்கு வாய்த்த பல நண்பர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள்.சுப்ரமணிய ராஜீவையும் லா.சா.ராவையும் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர்களாக கருதும் அவன்,அவர்கள் இருவரும் ஏன் ஒருமுறை கூட சோப்பு வாங்குவதையோ அதை வாங்க வருகிற பெண்ணைப் பற்றியோ சிந்திக்கத் தவறினார்கள் எனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.</p>
<p style="text-align:justify;">ஒருவாறான  மன உளைச்சலில் இருந்து அவன் வெளியேறும்போது சாயங்காலம் வந்துவிட்டது.கடைக்காரரிடம் மீண்டும் விசாரணைக்குக் கிளம்பினான்.விட்ட இடத்தில் இருந்து மறுபடியும்&#8230;அண்ணே அந்த போப்பு வாங்கிய பெண்&#8230;வாப்பா,தம்பி தயவு செஞ்சு  என்ன விட்டுடு.சோப்பு வாங்கினவங்க சீப்பு வாங்கினவங்க பேரெல்லாம் எனக்குத் தெரியாது.பதினாறு வருசமாக கடை வச்சிருக்கேன்.அம்பாதாயிரம் சோப்பாவது வித்திருப்பேன்.அதெல்லாம் யார் யார் வாங்கினதுன்னு உனக்கு வவுச்சர் தர முடியாது.இல்லண்ணே, போனவாரம் என மீண்டும் ஆரம்பிக்க ,அந்த சமயத்தில் கடைக்கு வந்த யாரோ ஒரு வயதான பெண் குறிப்பிட்ட சோப்பைக் கேட்டதும் என்னமாதிரி முகத்தை வைத்துக்கொள்வதென தெரியாமல் கருணா வெளிறிப்போனான்.கடைக்காரர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்.</p>
<p style="text-align:justify;">அத்தோடு அவன் விசாரனை இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.சர்யலிஸ,பின் நவீனத்துவ கதைகளை எல்லாம் படித்து புரிந்துகொள்ளும் கருணாவுக்கு கடைக்காரரின் திடீர் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை.மாலை பேசுவோம் என்றவர் சட்டென்று மாறிப்போனதின் பின்னணியில் ஏதோ ஒரு சூழ்ச்சியிருப்பதாக யூகித்தான்.அந்த சூழ்ச்சியே தான் எழுதப்போகும் குறுங்காவியத்தின் மைய முடிச்சாக இருக்கும் எனவும் நம்பத்தொடங்கினான்.பாப் மார்லேயின் பாடல்களை இரவு முழுக்க கேட்டு தன் காதல் அப்பாடலில் கரைந்து வழிவதை கிறகித்துக்கொண்டான்.நோ வுமன் நோ க்ரை என்ற பாப்பின் ஒரு பதம் அவனை ரொம்பவே கவர்ந்துவிட்டது.<br />
வழக்கம்போல் அல்லாமல் விடியப்போகும் இன்றைய நாள் தனக்கானதாக மாறும் என்னும் நம்பிக்கையில் எழுந்த கருணாவுக்கு சூரியன் சுடவில்லை.மிதமான மஞ்சள் நிறத்தில் வானம் சோபித்தது.எதிர்வீட்டு அக்காவின் குழந்தை அழுவது தன் இதயத்தின் பிரதிபலிப்பாகவும் நுணாமரக் காகம் கரைவது தனக்கு நேரப்போகும் மகிழ்ச்சியின் குறியீடாகவும் விளங்கிக்கொண்டான்.தன்னை மட்டும் விட்டுவிட்டு பூமி மிக வேகமாகச் சுழல்வது போன்ற தோற்றம்.கடைவாசலில் போய் நிற்கிறான்.</p>
<p style="text-align:justify;">யார் வந்து பொருள் வாங்கினாலும் கவனமாகப் பார்க்கிறான்.கடைக்காரரும் இவனை விநோதமாகப் பார்ப்பதை கருணா பொருட்படுத்தவில்லை.கொண்ட லட்சியத்தை ஈடேற்றுவதற்காக குறுகுறு பார்வைகளை எல்லாம் உதாசீனப்படுத்திய வரலாற்று நாயகர்களை நினைத்துக்கொண்டான்.இப்படித்தான் பல்பஸ்லியா மகாணத்தில் ஒரு ஏழைக்காதலன் தன் காதலுக்காக அரை நூற்றாண்டு தெருவிலே நின்று வெற்றியடைந்தது ஞாபகத்திற்கு வந்தது.நேரம் ஆக ஆக காலும் வெயிலும் கடுத்தன.<br />
இமைபொழுதும் சோராதிருத்தல் மட்டுமே இப்போதைய தேவை என்பதால் சிறுநீர் முட்டியதற்குக் கூட அவன் நகரவில்லை.சொல்லப்போனால் அன்று கடைக்கு வந்த அத்தனை பேரையும் அவன் பார்த்தான்.ஆனால்,பார்க்க வேண்டிய பானு வரவே இல்லை.மதியம் கடையில் மூன்று பிஸ்கட் வாங்கித் தின்றதோடு சரி.கடைக்காரரும் சந்தேகமில்லாமல் ஒரு பைத்தியம் கவுன்சிலர் வீட்டுக்கு குடி வந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்.முதல் நாள் தோல்வி.</p>
<p style="text-align:justify;">கருணா,அசரவில்லை.தன் காதல் தீவிரமானது.எளிதாகக் கிடைக்கும் காதலுக்கு என்ன மதிப்பிருக்கிறது,காமூஷியாவும் நம்மைப்போலத்தான் பதினாறு நாட்கள் பட்டினி கிடந்து தன் காதலியைக் கண்டுபிடித்தான்.அவனோடு ஒப்பிடுகையில் நம்முடைய ஒருநாள் தோல்வி மிகச் சாதரணம் என தனக்கு தானே தைரியத்தை தருவித்தான்.மறுநாளும் கடைவாசல்.முகத்தில் களைப்பும் முதல்நாள் தோல்வியும்.சிகரெட் பிடிக்க பழகியிருந்தாலும் தான் ஊதிக்கொண்டிருக்கையில் அவள் வந்துவிட்டாள் என்ன நினைப்பாளோ என தவிர்த்தான்.கருணா,நீ எவ்வளவு நல்லவனாக மாறிக்கொண்டிருக்கிறாய்.உன்னை ஒரே தடவையில் அந்தப்பெண் சுத்தமாக துவைத்து பிழிந்து காயப்போட்டுவிட்டாளே என அவனைக் குறித்து அவனே பெருமிதம் அடைகிறான்.சோப்பில் தொடங்கியதால் சுத்தம் துவைப்பு காய்தல் ஆகியன கருணாவின் ஞாபக அடுக்களில் இருந்து அகல்வதாயில்லை.முதல் நாள் கதைதான் மறுநாளும் என்று கதையை முடித்துவிடாதிருக்க, பானு கடைக்கு வருகிறாள்.நல்ல ஷாம்புபோட்டுக் குளித்திருப்பாள் போல.முடி காற்றில் பரவப் பரவ&#8230;பூக்கள் பூக்கும் தருணம் பாடல் பின்னணியாகக் கேட்கிறது.கடைக்காரரின் பழைய ரேடியோ புதிய காதலுக்குப் பூபோட ஆரம்பிக்கிறது.இந்தப்பாடலுக்கு ஏன் தேசிய விருது தராமல் போனார்கள்?</p>
<p style="text-align:justify;">இதற்காகத்தானே கருணா இத்தனை தவமும். இந்த பார்வைக்காகத் தானே இத்தனை தவிப்பும். பார் நன்றாகப் பார்.உன்னை அவமதித்து அருவருப்பான பார்வையில் உன்னை வெறுப்பேற்றிய கடைக்காரரை கம்பீரத்தோடு பார்.தான் அன்று பார்த்ததும் தனக்காக சோப்பை விட்டுத் தந்ததும் இவள்தான் என்பதை கடைக்காரரின் செவிகள் அதிர சொல் என்றது மனம்.பானு இம்முறை கடைக்கு வந்திருப்பது எதை வாங்க என்னும் ஆவல் இயற்கையானதுதானே.இவையாவும் குறுங்காவியத்தின் உபக்கதையாக மாறக்கூடும்.பானு கடைக்குள் நுழைவதை தூர நின்று பார்த்த கருணா ஆலயத்தில் தேவதை நுழைவதைப்போல வரித்தான்.அழுகிய தக்காளி ஒரு புறமும் வீணான முட்டைகோஸ் வாடை மறுபுறமும் அவன் நாசியில் சுகந்த மணத்தை பரப்பின.பானு இன்றைக்கு வாங்கப் போவது டாட்டாஸ் கொசுவர்த்தி என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.</p>
<p style="text-align:justify;">கடையில் இருந்து பானு வெளியேறியதும் கடைக்காரரிடம் போய் இப்ப வந்த பெண்ணைப் பற்றித்தாண்ணே நான் விசாரித்தது என்றான்.அடப்பாவி,அது நீ குடியிருக்கிற வீட்டு ஓனருடைய பொண்ணுப்பா.அவ அப்பாதான் இந்த வார்டு கவுன்சிலர்.முன்னால சாராய வியாபாரி .இப்ப அரசியல்ல அவருக்கு செம செல்வாங்கு. ஏலே தம்பி எதாவது ஆசையில வம்பு கிம்புல மாட்டிக்காத.விஷயம் தெரிஞ்சா வீட்ட மட்டுமல்ல உன்னையும் காலி பண்ணிருவாங்க.கருணா,சிரித்துக்கொண்டான்.காதலில் சாவும் வாழ்வென்றே அர்த்தம்.இனி வருவதை நான் எதிர்கொள்கிறேன்.என் மெய்யான காதல் சோப்பு மற்றும் கொசுவர்த்தி வாங்கும் பெண்ணுக்குரியது.அவளுடைய சாராய மற்றும் அரசியல் அப்பனுக்கானதல்ல.மேலும்,காதலில் காதல்தான் முக்கியமே தவிர அவள் அப்பனின் பேக்ட் ராப் முக்கியமே இல்லை.சாராயம் விற்பதில் என்ன தவறு இருக்கிறது.அரசாங்கமே வீதிக்குப் பத்து சாராயக்கடையைத் திறந்திருக்கும்போது.</p>
<p style="text-align:justify;">சில நாட்களுக்குப்பின் என்னும் சப்டைட்டில் தேவையில்லை.கருணா,வேலைக்கே போகாமல்காதலை துரிதமாக்கினான்.கைவசப்பட்டுவிடும் என்று அவன் உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.இதே நாளை இதோ நாளை என்பதாகக் கடந்து பின்னொருநாளில் அவளும் சிரிக்க.. பரஸ்பரம் அறிமுகமானார்கள்.அந்த சோப்பு சம்பவத்தில் தொடங்கி கொசுவர்த்தியில் தொடரும் தன் காதல் பிளாஸ்பேக்கை அவளிடம் மிக நெகிழ்ச்சியோடு விவரித்தான்.கருணாவின் காதல் கதை ட்விஸ்டுகள் ஏதும் இல்லாமல் முடியப்போகிறது என்று நினைத்துவிடாதீர்கள்.எல்லாவற்றையும் கேட்ட பானு மௌமாக அங்கிருந்து கிளம்பும் தருவாயில் மிக மெல்லிய குரலில்,உனக்கும் விருப்பம் என்றாள் நாளை பிரவுன் சுடிதாரில் வா.அதுதானே நீ சோப்பு வாங்க வரும்போது போட்டிருந்தது.உள்ளே சிரித்துக்கொண்டு வெளியே கோபிப்பது போன்ற பாவனையோடு பானு அங்கிருந்து போய்விட்டாள்.போன பிறகு பானு வருவாளா மாட்டாளா என கருணா விக்கித்ததையெல்லாம் சொல்ல வேண்டியதில்லை.</p>
<p style="text-align:justify;">சொன்ன நேரம் சொன்ன இடம்.கருணா காத்திருக்கிறான்.வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்திருந்தேன்.ஆனால்,பானு வந்தாள்.ஆயிரம் வீணைகள் ஒன்றாய் முழங்கத் தொடங்கியதுபோல கருணாவின் கண்ணும் காலும் வாயும் பல்லும் உற்சாக வெள்ளத்தில் நுரைபொங்கியது.என்னவொரு சந்தோசம்.எல்லாம் கொஞ்ச நேரந்தான். தூரத்தில் வந்த பானு அணிந்திருப்பது ப்ரவுன் சுடிதார் அல்ல.லேசான பச்சை நிறம் என்பது கிட்ட வந்ததும்தான் தெரிந்தது.ஆக,தன் காதல் பானுவால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கருணாவின் முகம் வாடியது.பானு எதுவும் பேசாமல் எதிரே வந்த ஒருத்தியோடு சிரித்துக்கொண்டே கடந்துவிடுகிறாள்.கருணாவிற்கு ஆத்திரமும் பெண்கள் மீதான அதிருப்தியும் பெருக்கெடுத்தது.சோப்பில் ஆரம்பித்து சுடிதாரில் முடியும் அளவுக்கு தன் காதல் அற்பமானதா?<br />
இல்லை.இதை இப்படியே விட்டுவிட முடியாது.தன் குறுங்காவியத் தேடல் குப்புறக் கவிழ்ந்துவிடக் கூடாது.நாளையும் தொடருவோம். விடிந்தது.</p>
<p style="text-align:justify;">பானுவுக்கும் இவன் சோகம் புரிந்திருக்கும் போல நேராக வந்து என்னங்க பயந்துட்டீங்களா,ப்ரவுன் சுடிதார் அழுக்காயிருந்துச்சுன்னு நேத்து பச்சை கலர் போட்டுவந்தேன்,வேற ஒண்ணும் இல்ல.சோப்பு யார் போட்டாலும் கரையும் நான் மட்டும் விதிவிலக்கா என்ன.. உங்க சோப்புதானே நானும் போடுகிறேன் அப்பறம் எப்படி உங்கமேல காதல் வராமல் போகும் ? என்றாள்.காதல்ல கலராங்க முக்கியம்.காதல், வெளியே தெரிவதில்லை.உள்ளே இருப்பது எனவும் முனுமுனுத்தாள் தலையை குனிந்துவாறு.</p>
<p style="text-align:justify;">கருணாவின் இதயம் எகிறி எகிறி குதித்தது.அன்றைக்கு மட்டும் நான் அவளிடமிருந்து அந்தச் சோப்பை அபகரிக்காமல் போயிருந்தால் பானு ப்ரவுன் சுடிதாரை துவைத்திருப்பாள்.இப்பவும் என்னைக் காயப்படுத்திவிடக் கூடாதென்று என் அபகரிப்பை பெரிதுபடுத்தாமல் இயல்பாக நடந்துகொள்கிறாளே  என நினைத்துக்கொண்டான்.தன்னிடம் பறிகொடுத்தது அவள் சோப்பை மட்டுமல்ல இதயத்தையும் என்பதை உணர்ந்து அவன் கண்களில் நீர்க் கசிய ஆரம்பித்தது.பானு பற்றிய குறுங்காவிய முயற்சியைப் பாதியிலேயே இல்லை இல்லை தொடக்கத்திலேயே விட்டுவிட்டு பானுவிற்கான காதல் பரிசாக சோப்பை எடுக்க வீட்டுக்குப் புறப்பட்டான்.இவ்வாறாக ஓர் இலக்கியப் பத்திரிகையாசிரியனின்  காதல் இறுதியை அடையும் போது நான் எழுத வேண்டிய புதிய பாட்டுக்கான பல்லவியாக சோப்புக்காரி சோப்புக்காரி என்று சிந்திக்கத் தொடங்கினேன்.  </p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=816&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/06/27/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%82%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பழக்கத்தின் அடிமைகள்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/05/28/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/05/28/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 28 May 2011 07:59:05 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=811</guid>
		<description><![CDATA[  உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா என்றொரு பாடல்.என்னுடய நண்பர் கபிலனால் எழுதப்பட்ட அப்பாடல் குறித்து நிறைய எதிர்வினைகள் வந்தன.பெண்ணென்றால் அவளுக்கு சமையல் அறை மட்டும்தான் சொந்தமா அதைத்தாண்டி அவளுக்கு உலகத்தில் வேறு எதுவுமே இல்லையா என்பதுபோல வந்த விமர்சனங்களை அடுத்து திரைப்பாடலில் பெண்களைப் பற்றிய சித்திரிப்புகளைக் கவனிக்கத் தோன்றியது.கபிலனுக்கு பெண்ணைக் கீழ்மைப்படுத்தும் நோக்கமோ விருப்பமோ இருந்திருக்க வாய்ப்பில்லை.என்றாலும்,பெண்களை எழுத நேர்கையில் ஓர் ஆணின் மனம் பொதுபுத்தியில் செயல்பட்டிருக்கிறது அவ்வளவே.என்பாடலிலும் சில இடங்களில் இந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=811&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"> </p>
<p style="text-align:justify;"><strong>உ</strong>ன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா என்றொரு பாடல்.என்னுடய நண்பர் கபிலனால் எழுதப்பட்ட அப்பாடல் குறித்து நிறைய எதிர்வினைகள் வந்தன.பெண்ணென்றால் அவளுக்கு சமையல் அறை மட்டும்தான் சொந்தமா அதைத்தாண்டி அவளுக்கு உலகத்தில் வேறு எதுவுமே இல்லையா என்பதுபோல வந்த விமர்சனங்களை அடுத்து திரைப்பாடலில் பெண்களைப் பற்றிய சித்திரிப்புகளைக் கவனிக்கத் தோன்றியது.கபிலனுக்கு பெண்ணைக் கீழ்மைப்படுத்தும் நோக்கமோ விருப்பமோ இருந்திருக்க வாய்ப்பில்லை.என்றாலும்,பெண்களை எழுத நேர்கையில் ஓர் ஆணின் மனம் பொதுபுத்தியில் செயல்பட்டிருக்கிறது அவ்வளவே.என்பாடலிலும் சில இடங்களில் இந்த பொதுபுத்தியின் அடையாளங்கள் தென்படுகின்றன.நான் மட்டுமல்ல,தமிழ்த்திரையுலகில் தற்போது குறிப்பிடத்தக்க பெண் பாடலாசிரியராக அறியப்படும் தாமரையிடமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.</p>
<p style="text-align:justify;">இந்த பொதுபுத்தி எங்கிருந்து தொடங்குகிறது. சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு கருத்தில் இருந்து படைப்பாளன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.உண்மையில்,படைப்பாளன் தன்னை விடுவித்துக் கொண்ட போதிலும் அப்படைப்பை உள்வாங்கும் சமூகம் பழக்கப்பட்ட பாதையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்புவதில்லை.என்னிடத்தில் உனக்கு  என்ன வேண்டும் என ஆண் கேட்க,நூறு ஜென்மம் உன்னோடு வாழ வேண்டும் என்று பெண் பதில் சொல்வதாக எத்தனையோ பாடல்கள். எதார்த்ததில் அவ்வாறுதான் ஒருபெண்ணும் ஆணும் யோசிக்கிறார்களா.எதார்த்த சினிமா எதார்த்த காமிரா எதார்த்த இசை என்று ஏகப்பட்ட எதார்த்த சொல்லாடல்களுக்கு நடுவில் பாடல்கள் இன்னும் எதார்த்தின் எந்த எல்லையையும் தொடவே இல்லை.பாடல்களே எதார்த்தத்திற்கு முரண்பட்டதுதானே என்று சிலர் கருதக்கூடும்.பாடல்கள் எதார்த்தத்திற்கு முரண்பட்டதாக தமிழ்ச்சமூகம் எந்த காலத்திலும் கருதாது.ஏனெனில், தமிழ் மரபு இசை மரபோடு இரண்டறக் கலந்தது.</p>
<p style="text-align:justify;">பாடல்களை மட்டையடியாக அடித்து எதற்கும் தேறாது என சொல்வதற்காகவே பட்டிமன்றப் படைகள் ஊர்தோறும் முளைத்துக்கொண்டிருக்கின்றன.எனக்குத் தெரிய எந்த பட்டிமன்றத்திலும் ஒரு நல்ல விவாதம் நிகழ்த்தப்பட்டதில்லை.வீட்டைக் கூட்டுவதில் சிறந்தவர்கள் ஆண்களா அல்லது பெண்களா? சோப்புப்போடுவதில் சோபிப்பவர்கள் அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்பதுமாதிரி நடத்தப்படும் பட்டிமன்றங்களில் மீண்டும் மீண்டும் திரைப்பாடல்கள் குறித்து தப்பிதமாகவே கற்பிக்கப்படுகின்றன.</p>
<p style="text-align:justify;">ஒருபாடல் எழுதப்படுவதும் அதை காட்சிப்படுத்தி மக்கள் முன்பு கொண்டுவருவதிலும் உள்ள நெருக்கடிகளைப் பற்றி யாரும் புரிந்துகொள்வதில்லை.பொதுபுத்தி நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் ஒரு படைப்பாளன் படும் அவதிகளும் சமசரங்களும் யார் கண்ணிலும் படுவதே இல்லை.இந்த நெருக்கடிகள் அவதிகள் தாண்டி ஒரு பாடல் அல்லது படைப்பு கொண்டுதரும் கருத்து என்னவிதமான வினைகளை ஏற்படுத்துகின்றன என்பதே நம்முடைய கவலை.ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படிவரைதானே &#8211; ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்<br />
அடங்குதல் முறைதானே &#8211; என்று கம்பன் ஏமாந்தான் பாடலில் கண்ணதாசன் எழுதியிருப்பார்.ஆதிக்க நாயகன் சாதிக்க வரும்போது ஏன் அடங்க வேண்டும் என அப்பாடலை இன்றும் கேட்டு ரசிக்கிறவர்கள் நம்மில் எத்தனைபேர் யோசித்திருக்கிறோம்? ஒரு திரைப்படம் பார்க்கிறபோது அந்தத் திரைப்படம் நம்மில் ஏற்படுத்தும் அதிர்வுகளை கண்டுகொள்ளாமலேயே கடந்துவிடுகிறோம்.</p>
<p style="text-align:justify;">சமீபத்தில் பயணம் என்றொரு திரைப்படம்.நல்ல சில திரைப்படங்களை இயக்கிய ராதாமோகனின் இயக்கத்தில் வெளிவந்தது.பழைய நம்பிக்கையில் படத்தைப்போய் பார்த்தால் திராபதையிலும் திராபதை.<br />
விமானத்தை முஸ்லீம் தீவிரவாதிகள் கடத்துகிறார்களாம்.பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசை அச்சுறுத்துகிறார்களாம்.நூறு கோடி பணமும் சிறையில் இருக்கும் தங்கள் தலைவரான யூசுப்கானின் விடுதலையும் நிபந்தனையாக விதிக்கிறார்களாம்.பல முயற்சிகளுக்குப் பின் கொடூரமான அந்த கும்பலின் பிடியில் இருந்து மக்களை அதாவது பயணிகளை விடுவிக்க வேறு வழியில்லாமல் யூசூப்கானை விடுதலை செய்ய அரசாங்கம் ஒத்துக்கொள்கிறதாம். ஆனால்,விடுதலை செய்து அழைத்துவரும் வழியில் விபத்து ஏற்பட்டு யூசூப் கான் இறந்துவிடுகிறாராம்.உடனே,அவர் போலவே இருக்கும் ஒரு சினிமா துக்கடா நடிகரை வரவழைத்து அந்த நடிகரை யூசூப்கான் போல வேடமணிய வைத்து அதைப் புகைப்படமாக எடுத்து விமானத்தில் இருக்கும் தீவிரவாதிகளிடம் காட்டுகிறார்களாம்.அதை விரல் சூப்பிக்கொண்டு தீவிரவாதிகள் நம்பி பயணிகளை விடுவிக்க சம்மதிக்கிறார்களாம்.இடைஇடையே சுவாரஸ்யத்துக்காக பல  டிவிஸ்ட்டுகள்.அதையெல்லாம் விவரிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைப்பு.இந்த கதையில் துக்கடா நடிகராக வருவபவரின் உண்மையான பெயர்.ரெங்கநாதன்.ஊர்.கும்பகோணம் என்பது துணைச்செய்தியாக தருகிறார்கள்.யூசூப்கான் போல எடுக்கப்படும் புகைப்படத்தில் யூசூப்கானின் கையில் வலுகட்டாயமாக இந்து நாளிதழ் திணிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p style="text-align:justify;">முஸ்லீம் தீவிரவாதிகளிடமிருந்து பயணிகளைக் காப்பாற்ற ரெங்கநாதன் என்னும் கும்பகோணத்து பிராமணனே உதவுகிறான் என்பதும் அவன் தன் கையில் இந்துத்துவாவை வைத்திருக்கிறான் என்பதும்தான் படம் நமக்கு தரும் செய்தி.படம்  முழுக்க நகைச்சுவை இருந்ததால் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தோம் நானும் இயக்குநர் பிரபுசாலமனும்.எங்களுடன் கலை இயக்குநர்.வைரபாலனும் வந்திருந்தார்.பாதிவரை சிரித்துகொண்டிருந்த எங்களுக்கு பாதிக்குமேல் எங்கள் சிரிப்பைப் பற்றிய அச்சம் ஏற்பட்டது.இந்தியாவில் மட்டும்தான் இப்படியான எரியும் பிரச்சனைகளுக்கு இடையே சிரிப்பை வரவழைக்க படைப்பாளர்கள் முயல்கிறார்கள்.கவனமாகவும் சரியான அரசியல் புரிதலோடும் அனுகப்பட வேண்டிய  ஒரு விஷயத்தை எவ்வளவு மொக்கையாக பார்க்கிறார்கள் அல்லது பார்க்கத் தூண்டுகிறார்கள் என வருத்தமாக இருந்தது.உயிரின் மதிப்பை உரிமைகளின் மதிப்பை உணராதவர்களுக்கு இது கேளிக்கை.ஆனால்,களத்தில்  நித்தம் நித்தம் செத்துக்கொண்டிருக்கும் சிறுபான்மைப் போராளிகளுக்கு? தணிக்கைத்துறை என்பது இம்மாதிரியான அபச்செயல்களை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.தணிக்கைத்துறையின் உண்மையான செயல்பாடுகள்தான் என்ன என்பதை அதன் உறுப்பினர்களாவது அறிந்திருப்பார்களா என்பது அய்யமே.</p>
<p style="text-align:justify;">திரும்பவும் பொதுபுத்திக்கு வருவோம்.இந்தியா என்பது இந்துக்களுக்காகவும் இந்தி பேசுபவர்களுக்காகவும் உருவான நாடு.இந்தி பேசாதவர்களும் இந்துக்களாக இல்லாதவர்களும் இந்தியாவைப் பாகிஸ்தானோடு இணைக்கத் துடிக்கும் தீவிரவாதிகள்.இந்தக் கருத்தை நம்பி நம்மூர் ஜனங்கள் கிரிக்கெட் மேட்சில் யாரிடம் தோற்றாலும் பாகிஸ்தானோடு தோற்கக் கூடாது என பிரார்த்தனை செய்கிறார்கள்.ஜெயித்தால் வெடிவெடித்துக் கொண்டாடுகிறார்கள்.முதலில் அடிமையாக இருந்து பழகி தற்போது பழக்கத்தின் அடிமைகளாக மாறிப்போயிருக்கிறோம்.</p>
<p style="text-align:justify;">பழகத்தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே என்ற மிஸ்ஸியம்மா திரைப்பாடலை யாரும் மறந்திருக்க முடியாது.தஞ்சை ராமைய்யாதாஸ் 1955 ல் எழுதியது.அதில் பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்குக் கூடவே கூடாது என்றொரு வரி.தனக்குத் தேவையானதைக் கேட்பதில் பிடிவாதமும் தனக்கு விருப்பமில்லாதவற்றை திணிக்கும்போது எதிர்வாதமும் செய்யக்கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்கிறார்கள்.அதைவிட கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ கன்னியர்கள் புன்னகையால் ஆடவரை வென்றிடவே பழகத்தெரிய வேணும் என்கிறார்கள்.பெண் எப்படி பழக வேண்டும் என்பதற்கு பாடம் நடத்தும் ஆண்கள்,தங்கள் சிந்தனைகளை பொதுபுத்தியில் இருந்து கைகொண்டிருப்பதுதான் வெட்கக்கேடு.</p>
<p style="text-align:justify;">இன்னொரு பாடல்,கணவன் வீட்டில் வாழப்போகும் தங்கைக்கு அண்ணன் கூறும் அறிவுரைப்பாடல்.அது,அறிவுரைப்பாடலா சுயமரியாதையை விற்கச்சொல்லும் சொரணைகெட்ட பாடலா என்பதை வரிகள் தெரிந்தவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.மாமனாரை மாமியாரை மதிக்கணும் அது சரிதான்.பெரியவர்களை கண்டிப்பாக மதிக்கத்தான் வேண்டும்.அடுத்தவரி மாலையிட்டக் கணவனையே துதிக்கணும்.துதிக்கத் தக்கவனாக இருக்கும் பட்சத்தில் துதிப்பதிலும் தவறில்லை.அதற்கடுத்து அண்ணன் ஆண் என்னும் பொதுபுத்திக்கு வருகிறான்,சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சி சாணம் தெளிச்சி கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்.தங்கைக்கு அறிவுரை கூறும் அண்ணனும் தனக்கு மனைவியாகப் போகிறவளிடம் இதையே எதிர்ப்பார்ப்பான் என்று எந்தப் பாவப்பட்ட தங்கையும் நினைத்திருப்பாளா?பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற திரைப்படத்தில் வெளிவந்த இப்பாடலை எழுதியதும் தஞ்சை ராமைய்யாதாஸ்தான்.1958ம் வருடத்து கருத்தாக மட்டுமே இப்பாடலைக் கருதுவதற்கில்லை.  இரண்டாயிரத்திலும் இதேதான் நிலை.</p>
<p style="text-align:justify;">ஒவ்வொரு பாடலாசிரியரும் பொதுபுத்தியில் இருந்து எழுதிய வரிகளை பட்டியலிட்டு குறைகாண்பது என்  நோக்கம் அல்ல.ஒருபாடல் உருவாகும் சூழல்.அது வெளிவரும்போது ஏற்படுத்தும் அதிர்வுகள் ஆகிய வற்றோடு சமூகத்தின் கருத்தோட்டத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே என் ஆவல்.ஒட்டுமொத்த சமூகமுமே பெண்களுக்கு எதிராக இயங்கும்போது பெண்கள் இந்த இக்கட்டுகளில் இருந்து எப்படி கரையேறுவார்கள் என்பதே கேள்வி.அதற்கும் ஒரு திரைப்பாடல் உண்டு.மனதில் உறுதி வேண்டும் என்னும் படத்தில் புலவர்.புலமைப்பித்தன் எழுதியது.சித்ரா மிக அற்புதமாக பாடிய அப்பாடலில் சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா என்பதோடு நில்லாமல் வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும், ஊமைகள் போலவே இன்றும் ,ஓயாமல் கண்ணீர் சிந்தும்,ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆளில்லை,சமநீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை? உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை என்பார்.இதுவும் ஆணால் எழுதப்பட்ட வரி என்பதால் பொதுபுத்தியில் இருந்து புனையப்படும் வரிகளை அன்பார்ந்த பெண்ணியவாதிகள் பொறுதருள்வீர்களாக.</p>
<p style="text-align:justify;">கேள்வியின் வலிமை கேட்கும் இடத்தைப் பொறுத்தது என்பதால் எதையும் கேட்டுத் தெளிவது நல்லது.</p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=811&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/05/28/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பதினாறு முறை தாகூரின் நினைவு வந்தது</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/04/24/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/04/24/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 24 Apr 2011 11:15:16 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=808</guid>
		<description><![CDATA[01. இதயத்திற்கு நெருக்கமானவர்களைப்பற்றி என்ன எழுதுவது? அவர்கள் நெருக்கமானதைப்பற்றியோ ஒரு கட்டத்தில் இதயமாகவே மாறிப்போனது பற்றியோ எழுதி புரிய வைப்பது எளிதான காரியமில்லை தாகூர்,இதயத்திற்கு நெருக்கமானவர் இதயமாகவே மாறிப்போனவர் 02. அவருடைய சொற்கள் ஞானிகளிடமிருந்தும் செயல்கள் சித்தர்களிடமிருந்தும் பெறப்பட்டவை ஞானிகளையும் சித்தர்களையும் உணர முடியும், உணர்த்த முடியாது தாகூர்,உணரத் தக்கவர் உணர்த்த முடியாதவர் 03. ஒருவரிடம் இருப்பது இன்னொருவரிடம் இல்லாது போகையில் புகழ்வதா இன்மைக்காக வருந்துவதா எனத் தெரியவில்லை பாரதியிடம் இல்லாதது தாகூருக்கு இயல்பாயிருந்தது தாகூரிடம் இருந்தது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=808&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>01.<br />
இதயத்திற்கு நெருக்கமானவர்களைப்பற்றி<br />
என்ன எழுதுவது?</p>
<p>அவர்கள் நெருக்கமானதைப்பற்றியோ<br />
ஒரு கட்டத்தில் இதயமாகவே மாறிப்போனது பற்றியோ<br />
எழுதி புரிய வைப்பது<br />
எளிதான காரியமில்லை</p>
<p>தாகூர்,இதயத்திற்கு நெருக்கமானவர்<br />
இதயமாகவே மாறிப்போனவர்</p>
<p>02.<br />
அவருடைய சொற்கள் ஞானிகளிடமிருந்தும்<br />
செயல்கள் சித்தர்களிடமிருந்தும் பெறப்பட்டவை</p>
<p>ஞானிகளையும் சித்தர்களையும்<br />
உணர முடியும், உணர்த்த முடியாது</p>
<p>தாகூர்,உணரத் தக்கவர்<br />
உணர்த்த முடியாதவர்</p>
<p>03.<br />
ஒருவரிடம் இருப்பது<br />
இன்னொருவரிடம் இல்லாது போகையில்<br />
புகழ்வதா இன்மைக்காக வருந்துவதா<br />
எனத் தெரியவில்லை</p>
<p>பாரதியிடம் இல்லாதது<br />
தாகூருக்கு இயல்பாயிருந்தது<br />
தாகூரிடம் இருந்தது<br />
பாரதியிடம் இல்லாமலேயே போனது</p>
<p>இரண்டு பேரிடமும் ஒன்றிருந்தது<br />
அது,கவிதை<br />
அந்தக் கவிதை இல்லாமலிருந்த<br />
தேசத்திற்கு எல்லாம் கொடுத்தது</p>
<p>04.<br />
தேசத்தைக் காதல் கொள்வது<br />
எப்படியென தாகூர் நமக்குக் கற்பித்திருக்கிறார்</p>
<p>தேசத்தை காதலிக்க விருப்பமில்லாதவர்களும்<br />
தாகூரைக் காதலிக்கலாம்<br />
ஏனெனில்,<br />
தேசமும் தாகூரும் வேறு வேறு அல்ல</p>
<p>05.<br />
அழகில் இருந்து ஆன்மீகத்தைக் கண்டடைந்தவர்<br />
தாகூர்&#8230;..அவர் ஓவியத்தில் இருந்தாலும்<br />
நம்மோடு உரையாடிக்கொண்டே இருக்கிறார்</p>
<p>06.<br />
சாந்தி நிகேதமென்றால் அமைதியின் உறைவிடம்<br />
அமைதியை எழுத்துக்களாக மடைமாற்றிய<br />
ஒரு மகாகவி<br />
நம்முடைய சத்தமான புகழஞ்லிகளைச்<br />
சத்தியமாய் விரும்பமாட்டான்</p>
<p>காற்றின் வழியாக நம்முடைய<br />
நறுமண அன்பினை அனுப்பி வைப்போம்</p>
<p>07.<br />
குறித்து வைத்ததை<br />
குறிப்பிட்ட நேரத்தில் சொல்ல முடிந்தால்<br />
அதுவே போதுமானது.ஆனால்,</p>
<p>தாகூரைப் பற்றிக் குறிக்கவும் முடியாது<br />
குறித்த நேரத்தில் முடிக்கவும் முடியாது</p>
<p>அவர் ஒரு அகன்ற தீபம்<br />
தீபத்தை தீபமென்றே சொல்லவேண்டும்<br />
ஜோதியென்றோ விளக்கென்றோ<br />
தரப்படுத்தக் கூடாது</p>
<p>08.<br />
தாகூரின் கண்கள்<br />
ஏழை இந்தியாவின் எதிர்கால வெளிச்சம்<br />
கூலித் தொழிலாளியின் கொப்பளிக்கும் கனா<br />
சோர்ந்துபோன காதலர்களின் சூரியத் தொடுகை</p>
<p>மலைகளின் நதிகள் எல்லாம்<br />
மண்ணை நோக்கியே எனப்தைப்போல<br />
அவருடைய ஒவ்வொரு இமைப்பும்<br />
உதயத்திற்கான உத்திரவாதங்கள்</p>
<p>09.<br />
தாகூர்,இப்போது இருந்தால் என<br />
எப்போதாவது நினைப்பதுண்டு</p>
<p>இருக்க வேண்டும் என ஏன்<br />
நினைக்கிறேன்?</p>
<p>அவர் இல்லாமல் போனதாக<br />
யாராவது நினைக்க முடியுமா?</p>
<p>10.<br />
புல்வெளியில் பூக்களில்<br />
பூமிப்பந்திம் முதுகில்<br />
ஈரம் தொலைத்த கோடை வெயிலில் என<br />
எங்கும் எங்கெங்கும் அவர்<br />
நிறைவாய் நிறைந்து சிரிக்கிறார்</p>
<p>காகிதங்களைக் கெளரவப்படுத்திய<br />
அவருடைய இலக்கியங்களால்<br />
எழுத்து தேவதை இளமையோடிருக்கிறாள்</p>
<p>தாகூரின் இரண்டு வரிகளை<br />
மனப்பாடம் செய்துவிட்டால்<br />
இரு நூறாண்டு வாழ்ந்ததற்குச் சமம்</p>
<p>11.<br />
நாம் நம்முடைய தேசீய கீதத்திற்கு<br />
எழுந்து நிற்பது<br />
தாகூருக்கு எழுந்து நிற்பதே ஆகும்</p>
<p>படைப்புகள்<br />
காலத்தைக் கடந்து மட்டுமல்ல<br />
காலத்தின் சாட்சியங்களாவும் நிற்பதே<br />
பெருமை</p>
<p>12.<br />
இருக்கு நிலையில் இருந்துதான்<br />
எதையும் பார்க்க முடியும் என்பது தவறு</p>
<p>எதையும் பார்க்கத் துணிந்துவிட்டால்<br />
இருக்கும் நிலை இயல்பாகவே உயரும்</p>
<p>தாகூர்,<br />
எஸ்டேட்டுகளின் முதலாளியாக அல்லாமல்<br />
பூவனங்களில் தும்பியாகத் திரிந்திருக்கிறார்</p>
<p>13.<br />
படுகொலைக்கு குமுறிய தாகூர்<br />
சர் பட்டத்தை தூக்கி எறிந்திருக்கிறார்</p>
<p>ஒரு நல்ல படைப்பாளி<br />
மக்களுக்காகப் பட்டங்களை ஒருபோதும்<br />
சுமக்க விரும்புவதில்லை</p>
<p>மக்களே கொடுத்த பட்டமானாலும்<br />
அதை மக்களுக்கே சமர்ப்பிக்கும் துணிச்சல்<br />
மகாகவிகளுக்கே உரியது</p>
<p>14.<br />
இருக்கும் போதே<br />
உயரங்களைத் தொட்டவர் என்பதாலல்ல<br />
இன்று வரையிலும் அதே<br />
உயரத்திலேயே இருக்கிறார் என்பதுதான்<br />
தாகூரின் தனித்துவம்</p>
<p>15.<br />
தாகூரின் நூல்களைத் தொடுகையில்<br />
தாயின் கர்ப்பத்திற்கே மீண்டும்<br />
போவது போலிருக்கிறது</p>
<p>அவர் தொடங்கும் சொல் மந்திரமாகவும்<br />
தொடரும் சொல் வேதமாகவும் மாறிப்போகின்றன</p>
<p>16.<br />
மொழிபெயர்ப்பை வாசிக்கும் போதே<br />
மூல மொழியை நேசிக்கத் தூண்டுபவர்கள்<br />
யுகக்கவிகள்</p>
<p>ஒரு மொழியின் சிறப்பு<br />
அதைப் புழங்கும் படைப்பாளிகளிடமிருந்தே<br />
விருத்தி அடைகிறது</p>
<p>தாகூர்,<br />
 பிரயோகிக்கும் சொற்களில் இருந்து<br />
ஆத்மாவின் மூலத்தையே அறியத் தருகிறார்</p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=808&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/04/24/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பெண்களின் அரசியல்</title>
		<link>http://yugabharathi.wordpress.com/2011/04/21/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://yugabharathi.wordpress.com/2011/04/21/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 21 Apr 2011 11:57:53 +0000</pubDate>
		<dc:creator>யுகபாரதி</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://yugabharathi.wordpress.com/?p=805</guid>
		<description><![CDATA[ஒவ்வொரு பெண்ணும் ஒரு புரட்சிவாதி பெரும்பாலும் தன்னைத் தானே எதிர்த்துத் தீவிரமாகப் புரட்சி செய்பவன் என்ற ஆஸ்க்கார் ஒயில்ட்டின் மேற்கொள் நினைவுக்கு வந்தது.அரசியலில் பெண்கள் ,பெண்களின் அரசியல் இரண்டைக் குறித்தும் இந்த தேர்தல் நேரத்தில் தீவிரமாக புரிந்துகொள்ள முடிந்தது.தில்லியில் சோனியாகாந்தி,மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி,தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்.ஜெ.ஜெயலலிதா மூவருக்கும் அரசியல் தெரிந்திருக்கிறது. அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் தந்திரங்களைக் கற்று வைத்திருக்கிறார்கள். அவர்கள் கற்று வைத்திருக்கும் தந்திரங்கள்தான் இன்றைய தேர்தல் களத்தில் வெகுவான கவனத்தையும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=805&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>ஒவ்வொரு பெண்ணும் ஒரு புரட்சிவாதி பெரும்பாலும் தன்னைத் தானே எதிர்த்துத் தீவிரமாகப் புரட்சி செய்பவன் என்ற ஆஸ்க்கார் ஒயில்ட்டின் மேற்கொள் நினைவுக்கு வந்தது.அரசியலில் பெண்கள் ,பெண்களின் அரசியல் இரண்டைக் குறித்தும் இந்த தேர்தல் நேரத்தில் தீவிரமாக புரிந்துகொள்ள முடிந்தது.தில்லியில் சோனியாகாந்தி,மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி,தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்.ஜெ.ஜெயலலிதா மூவருக்கும் அரசியல் தெரிந்திருக்கிறது.</p>
<p>அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் தந்திரங்களைக் கற்று வைத்திருக்கிறார்கள். அவர்கள் கற்று வைத்திருக்கும் தந்திரங்கள்தான் இன்றைய தேர்தல் களத்தில் வெகுவான கவனத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதிகாரத்தைக் கைப்பற்றுத் துடிக்கும் பெண்கள் அந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தொடங்கும்போது நேரும் சாதாரணச் சிக்கலாக இதைப் பார்க்க முடியவில்லை.அவர்களின் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும் ஆண் சமூகத்தின் மீதான வெறுப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.அரசியல் என்பது மக்களுக்கான நலம்சார்ந்த சிந்தனையாகவே இருக்க முடியும்.அவ்வாறிருக்க அந்தச் சிந்தனைக்கு அறம்சார்ந்த வழிமுறைகளை ஏன் பெண்களால் கட்டமைத்துக் கொள்ள முடியவில்லை?</p>
<p>முற்று முழுக்க ஆண்களால் சூழப்பட்ட அரசியல் களத்தில் இன்று முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் பெண்களாக அமைந்திருப்பது காலத்தின் மேல் நோக்கிய வளர்ச்சியே என்றபோதும் சிந்தனைகள் ஒரு வியாபாரத் தந்திரத்தோடு அரங்கேற்றப்படுவது கீழ்நோக்கிய அபத்தம். பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் பெண்களுக்கான வழிகள் என்பது இன்றும் இருளடைந்தே இருக்கின்றன.இந்த இருட்டுப் பாதையில் தன்னுடைய இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் ஆற்றும் கடமையும் தனித்துவமும் அவ்வழிகளை கண்டடையும் லாந்தர் விளக்காக எனக்குத் தோன்றுகிறது.ஒருவேளை அவர்களின் பிடிவாதம் அல்லது வைராக்கியம் ஆணாகப்பட்ட ஒருவனுக்கு எரிச்சலை ஊட்டுவதால்தான் அவர்களின் முடிவுகள் விமர்சிக்கப்படுகின்றனவா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.கூட்டணிக் கட்சிகளை தன்னை அண்டிப் பிழைக்கவந்த எடுபிடிகளாகக் கருதுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?.ஏதேச்சதிகாரத்தின் ஒரு கூறாகவே இதனை கருத வேண்டும்.எனக்குக் கீழ்தான் எல்லாம் என்ற பண்ணையார்த்தனத்தை ஒருக்காலும் பெண்களின் விடுதலையாகப் பார்க்க முடியாது எந்ததெந்த தொகுதிகளில் யார் யார் நிற்க வேண்டும் என்பதை தாய்க் கழகமாகச் செயல்படும் கூட்டணிக்கட்சிதான் முடிவெடுக்கும்.அந்த முடிவுகளுக்கு கூட்டணியில் உள்ள ஏனையக் கட்சிகளும் ஒப்பதல் அளித்த பிறகு எடுத்த முடிவை அறிவிக்க வேண்டும்.ஜனநாயகத்தின் ஓரே சாவியாக இருக்கும் தேர்தலில் யாரை எப்படி பூட்டுவது என ஆலோசிப்பதா கூட்டணி தர்மம் என்பதை மேற்கூறிய அம்மையார்கள்தான் சொல்ல வேண்டும்.</p>
<p>கட்சியைக் காப்பாற்றுவதற்காக அல்லது ஆட்சியை கைப்பற்றுவதற்காக என்று அவர்கள் சொல்வார்களே ஆனால் அதைவிட அந்தக் கட்சிக்கும் பிடிக்கப்போகும் ஆட்சிக்கும் என்ன கதி என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். தேர்தலை முன்வைத்து நிகழ்த்தப்படும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் பெண்மணிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது கிருஷ்ணம்மாள்தான் நினைவுக்கு வருகிறார்.எத்தனை அற்புதமான பெண்மணி அவர்.தன் வாழ்நாள் முழுக்க மக்களுக்காக செயலாற்றி தன் தியாக வாழ்க்கையால் தனித்துத் தெரிகிறார்.</p>
<p>கீழ்வெண்மணி படுகொலையால் கம்யூனிஸ்கள் கொதித்துப்போயிருந்த தருணத்தில் அவர்களின் கோபம் முழுக்க சர்வோதயா தொண்டர்கள் மேல் இருந்தது.புரட்சி என்ற பெயரில் மக்களை சாகக் கொடுத்தவளாக சர்வோதயா தொண்டர்கள் கம்யூனிஸ்டுகளைக் குற்றம் சாட்டினார்கள்.இப்படியானதொரு இக்கட்டான சூழ்நிலையில் கிருஷ்ணம்மாள் ஒரு வருட காலம் கீழ் வெண்மணியிலேயே தங்கி மக்கள் பணியாற்றி இருக்கிறார்.1971ம் வருடம் என்று நினைக்கிறேன். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கீழ் வெண்மணியில் உள்ள 74 தலித் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் என்னும் கணக்கில் 74 ஏக்கர்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.அந்நிலங்களை நன்கு விளையக் கூடிய மகசூல் பூமி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபெண் தன் கோபத்தை சமூகத்தின் நலனுக்காக காட்டிய விதத்தை அறியும்போது தேர்தல் களத்தில் தன்னை முன்னிறுத்துவதற்காக மேற்கூறிய அம்மணிகள் செய்யும் சேஷ்டைகளை சகிக்க முடியவில்லை.இன்றைக்கும் கீழ்வெண்மணி மக்கள் கிருஷ்ணம்மாளைப் பார்வதியாகவும் அவருடைய கணவர் ஜெகந்நாதனை சிவனாகவும் பார்க்கிறார்கள்.காரணம்,1967ல் அரைப்படி கூலி உயர்வாகக் கேட்டதற்காக சாவுண்ட சேரி மக்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் என்பது எத்தகைய வெற்றியைத் தந்திருக்கிறது.அந்த வெற்றியைச் சாத்தியப் படுத்தியதற்காக கிருஷ்ணம்மாள் காலம் உள்ள காலம் வரை போற்றப்படுவார். அதிகம் இந்த தலைமுறை அறிந்திராத பூதான இயக்கத்தை தமிழகத்தில் கட்டி எழுப்பியவர்களில் கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் முக்கியமானவர்கள்.தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகள் தூக்கிய போர்க்கொடிக்கு மாற்றாக அமைதியான முறையில் வினோப பாவே தேர்ந்தெடுத்த முறைதான் பூதான இயக்கம்.அதாவது, உயர்சாதியினரிடம் இருந்து நிலங்களைத் தானமாகப் பெற்று நிலமற்ற ஏழைகளுக்குத் தானமாக தருவதுதான் பூதான இயக்கத்தின் கொள்கை.</p>
<p>எதை வேண்டுமானாலும் தானமாகப் பெறலாம்,பெற்ற தானத்தைப் பிறருக்குத் தானமாகத் தருவது என்ற நிலைப்பாடு சற்றே வித்யாசமானது.காந்தியின் சீடர்களில் வினோப பாவே செயலூக்கும் கொண்ட ஒருவராகவே கருதப்படுவார்.அந்த இயக்கத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்றி நடத்தியதோடு மட்டுமல்லாமல் மூன்றே வருடத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் கிருஷ்ணம்மாள்- ஜெகந்நாதன் தம்பதியினர் பெற்றனர்.பெற்ற நிலங்களை இயக்கத்தின் வழிகாட்டுதலோடு பிரித்தும் கொடுத்திருக்கிறார்கள்.ஒருவர் தன் நிலத்தைத் தானமாக தர முன்வருவது நிலபிரப்புத்துவ சமுதாயத்தில் சாத்தியமில்லை.ஆனால்,அதையும் தங்கள் நடத்தையால் பேச்சால் கொள்கைகளால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள். இந்தத் தம்பதிகள் தன் வாழ்நாள் முழுக்க காந்தியின் வழியே சரி என்று பணியாற்றிக்கொண்டு இருந்தாலும் மக்களுக்கான போராட்ட வடிவங்களை கைகொள்வதில் தவறியதில்லை.குறிப்பாக அகில இந்திய அளவில் கவனம் பெற்ற இவர்களின் போராட்டம்,இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம்.இறால் பண்ணைகளை ஊக்குவிப்பதன் மூலம் நிலத்தின் சீர் கெடும் என்பது மட்டுமல்லாமல் பண்ணைகளுக்குத் தேவையான நீரை எடுப்பதற்காக ஆழ்கிணறுகளைத் தோண்டி உள்ள நீரை எல்லாம் உறிஞ்சிவிடுதால் பக்கத்து நிலங்கள் பாழ்பட்டு விளையும் பயிர்கள் நீரின்றி கருகும் அவலம் நேர்கிறது.பயிர்கள் கருவது ஒருபுறமும் பயிர்களை விளைக்கும் ஏழை வயிறுகள் இன்னொருபுறம் கருகுகின்றன.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்றுக்கு வாழும் சாட்சியமாக இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம் அவசியப்படுகிறது.இந்த போராட்டத்தின் விளைவாக உச்சநீதி மன்றம் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.தமிழகத்தில் ஏன் அகில இந்தியாவில் மக்களுக்கு எந்த நல்ல தீர்ப்பை நீதி மன்றங்கள் வழங்கினாலும் அதைச் செயல்படுத்தவிடாமல் ஆளும் கட்சிகள் முட்டுகட்டைகள் போடுகின்றன.இறால் பண்ணை விஷயத்திலும் அதுவே நடந்தேறி வருகிறது.</p>
<p>அதிகாரத்தைப் கைப்பற்றத் துடிக்கும் பெண்கள். அதிகாரத்திற்கு எதிராக போராடும் பெண்கள்,இந்த இரண்டு வகையினரில் நான் எப்பவும் அதிகாரத்தை எதிர்க்கும் பெண்களின் பக்கமே நிற்க விரும்புவேன்.காரணம்,அதிகாரம் என்பது துஷ்பிரயோகத்திற்கான துருப்புச்சீட்டாக இருக்கிறது.அதை ஏற்பதை விடவும் எதிர்ப்பதே சிறப்பு.முடிந்தவரைப் போராடி பின்னால் எதுவும் நடக்காத பட்சத்தில் கட்சியோ கொள்கையோ பிறழ்வது அரசியலில் சாணக்கியத்தனம்.மன்னிக்கவும் தேர்தல் அரசியலில். இந்தத் தேர்தல் வேறெந்த தேர்தலை விடவும் முக்கியமான தேர்தல்.சென்ற தேர்தலை விட ஓரளவு குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் யார் யார் அதிகாரத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அதுவரை,ஆண்களுக்கு சற்றும் அரசியலில் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துவரும் சோனியா,ஜெயலலிதா,மம்தாபானர்ஜி.மாயாவதி ஆகியோரின் ஆவலாதி காரியங்களைக் கண்டுகளிப்போம்</p>
<br />  <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=yugabharathi.wordpress.com&#038;blog=8764363&#038;post=805&#038;subd=yugabharathi&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://yugabharathi.wordpress.com/2011/04/21/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/f4a7fd6e4f737b1dcf6ad238f8523b6a?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">யுகபாரதி</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
